மத்திய பட்ஜெட்டால் பங்குச் சந்தையில் கடும் சரிவுமத்திய பட்ஜெட்டால் பங்குச் சந்தையில் கடும் சரிவு ... தமிழக மின் நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ.11,000 கோடி திரட்ட திட்டம் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - தமிழக மின் நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ.11,000 கோடி திரட்ட திட்டம் ... ...
மத்திய பட்ஜெட் எதிரொலி: நகைக் கடைகள் அடைப்பு:1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2012
23:51

மத்திய அரசின் பொது பட்ஜெட்டை கண்டித்து, நேற்று துவங்கிய நகைக் கடைகள் அடைப்பு, வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக,பல கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் முடங்கியுள்ளது. இதனால்,1.50லட்சத்துக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்,' என, நகை வியாபாரிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலர் ஸ்ரீராம் தெரிவித்தார்.
மத்திய அரசு நேற்று முன்தினம் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், பிராண்ட் நகைகளுக்கு மட்டும் விதித்து வந்த உற்பத்தி வரி என்பது அனைத்து நகைகளுக்கும் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.மேலும், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பணம் செலுத்தி நகை வாங்கும் பொது மக்களிடம் இருந்து, 1 சதவீத (டி.டீ.எஸ்.,) வரியை வசூலித்து செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
இறக்குமதி தங்கத்தின் மீதான வரி விதிப்பை, 2 சதவீதத்தில் இருந்து, 4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஒரு பவுனுக்கு, 1,000 ரூபாய் வரை விலை உயர்வு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.இந்த பொது பட்ஜெட்டை கண்டித்து, அகில இந்திய அளவில், நேற்று தங்க நகை வியாபாரிகளின் போராட்டம் துவங்கியுள்ளது. இந்தப் போராட் டம் மூன்று நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று, சேலத்தில் தங்க நகை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழக தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலர் ஸ்ரீராம் கூறியதாவது:
மத்திய அரசின் பொது பட்ஜெட்டை கண்டித்து அகில இந்திய அளவில் நடத்தப்படும் கடையடைப்பு போராட்டம், வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நகைக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில், 900 கடைகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.இந்த கடை அடைப்பு போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பில் வர்த்த முடக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மத்திய, மாநில அரசுகளுக்கு பல லட்சம் ரூபாய் வரி இழப்பும் ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதுமாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரும், 1.50 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, பொது பட்ஜெட்டில் அறிவித்துள்ள வரி விதிப்புகளை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)