பதிவு செய்த நாள்
17 மார்2012
23:52
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகம் (டேன்ஜெட்கோ) மற்றும் தமிழ்நாடு பவர்-பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் அரசு உறுதிபத்திரங்கள் வாயிலாக, 11 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளன.இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது:
வாரியத்திற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிலுவை உள்ளது. ஒட்டுமொத்த இழப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இந்நிலையில், வங்கிகளிடம் பெற்ற கடனை திரும்ப அளிக்கவும், பல்வேறு திட்டங்களுக்காகவும் நிதி தேவைப்படுகிறது. ஆனால், மின்துறைக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. இதனால், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு தமிழக அரசு, கடன் உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்துள்ளது. இது தவிர, மாநிலத்தின் பவர் - பைனா ன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு, 6,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சந்தை நிலவரத்தின் அடிப்படையில் கடன் பத்திர வெளியீடு இருக்கும். எனினும், நடப்பு ஆண்டு இறுதிக்குள் நிதி திரட்டிக் கொள்ளப்படும்.தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, சீராக வினியோகிப்பதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்திட்டத்திற்காக, மத்திய அரசின் மாசற்ற எரிசக்தி நிதியத்தில் இருந்து, 2,752 கோடி ரூபாய் வழங்க மத்திய மின்சார ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில், மின் வினியோகத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை,மேலும் வலுப்படுத்தும் திட்டங் களுக்காக,10ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.இதற்கான நிதி, பல்வேறு இனங்கள் வாயிலாக திரட்டப்படும்.ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம்(ஜப்பான் இன்டர்நேஷனல் கோவாப்பரேஷன் ஏஜன்சி), தமிழகத்தின் மின் பகிர்மானம் மற்றும் வினியோகத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக, 3,000 கோடி ரூபாய் தர உள்ளது.
இதன் மூலம், குறிப்பாக, காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை சீராக வினி யோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|