மத்திய பட்ஜெட் எதிரொலி: நகைக் கடைகள் அடைப்பு:1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்புமத்திய பட்ஜெட் எதிரொலி: நகைக் கடைகள் அடைப்பு:1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை ... ... கைத்தறி துணிகள் விற்பனை கோ-ஆப்டெக்ஸ் புது சலுகை கைத்தறி துணிகள் விற்பனை கோ-ஆப்டெக்ஸ் புது சலுகை ...
தமிழக மின் நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ.11,000 கோடி திரட்ட திட்டம் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2012
23:52

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகம் (டேன்ஜெட்கோ) மற்றும் தமிழ்நாடு பவர்-பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் அரசு உறுதிபத்திரங்கள் வாயிலாக, 11 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளன.இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது:
வாரியத்திற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிலுவை உள்ளது. ஒட்டுமொத்த இழப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இந்நிலையில், வங்கிகளிடம் பெற்ற கடனை திரும்ப அளிக்கவும், பல்வேறு திட்டங்களுக்காகவும் நிதி தேவைப்படுகிறது. ஆனால், மின்துறைக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. இதனால், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு தமிழக அரசு, கடன் உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்துள்ளது. இது தவிர, மாநிலத்தின் பவர் - பைனா ன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு, 6,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சந்தை நிலவரத்தின் அடிப்படையில் கடன் பத்திர வெளியீடு இருக்கும். எனினும், நடப்பு ஆண்டு இறுதிக்குள் நிதி திரட்டிக் கொள்ளப்படும்.தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, சீராக வினியோகிப்பதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்திட்டத்திற்காக, மத்திய அரசின் மாசற்ற எரிசக்தி நிதியத்தில் இருந்து, 2,752 கோடி ரூபாய் வழங்க மத்திய மின்சார ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில், மின் வினியோகத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை,மேலும் வலுப்படுத்தும் திட்டங் களுக்காக,10ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.இதற்கான நிதி, பல்வேறு இனங்கள் வாயிலாக திரட்டப்படும்.ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம்(ஜப்பான் இன்டர்நேஷனல் கோவாப்பரேஷன் ஏஜன்சி), தமிழகத்தின் மின் பகிர்மானம் மற்றும் வினியோகத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக, 3,000 கோடி ரூபாய் தர உள்ளது.
இதன் மூலம், குறிப்பாக, காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை சீராக வினி யோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)