பதிவு செய்த நாள்
18 மார்2012
15:30
மும்பை : இந்திய நிறுவனங்களான டாடா ஸ்டீல் மற்றும் விப்ரோ ஆகிய இரண்டும் உலகின் பாரம்பரிய நிறுவனங்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. உலகின் பாரம்பரிய நிறுவனங்களுக்கான சர்வேயை, அமெரிக்காவில் உள்ள எத்திஸ்பியர் இன்ஸ்டியூட் நடத்தி வந்தது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், போர்ச்சுக்கல், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 5000க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் சர்வே நடத்தி, அதில் பாரம்பரிய நிறுவனங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. எத்திஸ்பியர் வெளியிட்டுள்ள 145 கம்பெனிகளில் இந்தியாவின் டாடா ஸ்டீல் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் உலகின் பாரம்பரிய நிறுவனங்களாக தேர்வாகி இருக்கிறது.
இப்படி ஒரு கவுரவம் தங்களது நிறுவனத்திற்கு கிடைத்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சி அளிப்பதாக டாடா ஸ்டீல் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஹெச்.எம்.நெரூர்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|