பதிவு செய்த நாள்
18 மார்2012
23:41
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், தற்போது வரையிலுமாக, நாட்டின் நெல் கொள்முதல், 2.70 கோடி டன்னைத் தாண்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதலை விட, 14 சதவீதம் அதிகம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.,) மற்றும் மாநில அரசுகளின் முகமை அமைப்புகள் மூலம் விவசாயிகளிடமிருந்து, நெல் கொள்முதலை மேற்கொண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில், 3.50 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்ற பிப்ரவரி மாதம், மத்திய வேளாண் துறையின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடு வெளியிடப்பட்டது. அதில், நாட்டின் நெல் உற்பத்தி, 10.27 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.பொதுவாக, நெல் கொள்முதலில் பஞ்சாப் மாநிலத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக இருக்கும். ஆனால், நடப்பாண்டில் இம்மாநிலத்தில், 77 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 86 லட்சம் டன்னாக இருந்தது.
நடப்பாண்டில், சண்டிகர், அரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சண்டிகர் மாநிலத்தில், 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அரியானா மாநிலத்தின் நெல் கொள்முதல் 16 லட்சம் டன்னிலிருந்து,
20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. ஆந்திராவின் நெல் கொள்முதல் 35 லட்சம் டன்னிலிருந்து, 41 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.மேலும், இதே காலத்தில், உத்தர பிரதேசத்தின் நெல் கொள்முதல் 18 லட்சம் டன்னிலிருந்து, 27 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இவை தவிர, ஒடிசா (16 லட்சம் டன்), பீகார் (8 லட்சம் டன்), மத்திய பிரதேசம் (6 லட்சம் டன்) ஆகிய மாநிலங்களின் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|