உலகின் பாரம்பரிய நிறுவனங்களாக டாடா ஸ்டீல், விப்ரோ தேர்வு!உலகின் பாரம்பரிய நிறுவனங்களாக டாடா ஸ்டீல், விப்ரோ தேர்வு! ... நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில்... மின் உற்பத்தி 75 சதவீத இலக்கை எட்டியது நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில்... மின் உற்பத்தி 75 சதவீத இலக்கை ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நெல் கொள்முதல் 2.70 கோடி டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2012
23:41

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், தற்போது வரையிலுமாக, நாட்டின் நெல் கொள்முதல், 2.70 கோடி டன்னைத் தாண்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதலை விட, 14 சதவீதம் அதிகம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.,) மற்றும் மாநில அரசுகளின் முகமை அமைப்புகள் மூலம் விவசாயிகளிடமிருந்து, நெல் கொள்முதலை மேற்கொண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில், 3.50 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்ற பிப்ரவரி மாதம், மத்திய வேளாண் துறையின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடு வெளியிடப்பட்டது. அதில், நாட்டின் நெல் உற்பத்தி, 10.27 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.பொதுவாக, நெல் கொள்முதலில் பஞ்சாப் மாநிலத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக இருக்கும். ஆனால், நடப்பாண்டில் இம்மாநிலத்தில், 77 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 86 லட்சம் டன்னாக இருந்தது.
நடப்பாண்டில், சண்டிகர், அரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சண்டிகர் மாநிலத்தில், 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அரியானா மாநிலத்தின் நெல் கொள்முதல் 16 லட்சம் டன்னிலிருந்து,
20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. ஆந்திராவின் நெல் கொள்முதல் 35 லட்சம் டன்னிலிருந்து, 41 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.மேலும், இதே காலத்தில், உத்தர பிரதேசத்தின் நெல் கொள்முதல் 18 லட்சம் டன்னிலிருந்து, 27 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இவை தவிர, ஒடிசா (16 லட்சம் டன்), பீகார் (8 லட்சம் டன்), மத்திய பிரதேசம் (6 லட்சம் டன்) ஆகிய மாநிலங்களின் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)