உலகின் பாரம்பரிய நிறுவனங்களாக டாடா ஸ்டீல், விப்ரோ தேர்வு!உலகின் பாரம்பரிய நிறுவனங்களாக டாடா ஸ்டீல், விப்ரோ தேர்வு! ... நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில்... மின் உற்பத்தி 75 சதவீத இலக்கை எட்டியது நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில்... மின் உற்பத்தி 75 சதவீத இலக்கை ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உற்பத்தி வரி அதிகரிப்பால் கார் விலை உயருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2012
23:43

புதுடில்லி:பட்ஜெட்டில் கார்களுக்கான உற்பத்தி வரி, 22 சதவீதத்திலிருந்து, 24 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மாருதி சுசூகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஹோண்டா, டொயோட்டா போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் கார்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.
மாருதி சுசூகி இந்தியா மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா ஆகிய நிறுவனங்கள், அனைத்து மாடல் கார் விலையையும், 2-3 சதவீதம் வரை உயர்த்த போவதாக அறிவித்துள்ளன. இதன்படி, இந்நிறுவனங்களின் கார்கள் விலை, 6,000 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம், அதன் பிரையோ மாடல் காரின் விலையை, 7,000 ரூபாய் வரையும், அக்கார்டு மாடல் காரின் விலையை, 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளது.டொயோட்டா நிறு வனம், அதன் எடியோஸ் மாடலின், பெட்ரோல் மற்றும் டீசல் வகை கார்கள் விலையை முறையே, 11 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் 13 ஆயிரத்து 600 ரூபாய் வரையும், லிவா மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் வகை கார்கள் விலையை முறையே, 9,500 ரூபாய் மற்றும் 11 ஆயிரத்து 500 ரூபாய் வரையும், பார்சூன் மாடல் கார் விலையை, 80 ஆயிரம் ரூபாய் வரையும், ஆல்டிஸ் மாடல் கார் விலையை, 39 ஆயிரம் ரூபாய் வரையும், இன்னோவா மாடல் கார் விலையை, 35 ஆயிரத்து 200 ரூபாய் வரையும் உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் வர்த்தகம் மற்றும் பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளது.இது குறித்து மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவன தலைவர் பவன் கோயங்கா கூறியதாவது:சில மாதங்களாக கார் தயாரிப்பிற்கான அனைத்து மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பட்ஜெட்டில் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, கார்கள் விலையை, 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. மேலும், உற்பத்தி வரி உயர்வால் குறுகிய காலத்திற்கு கார், டிராக்டர்கள் விற்பனை பாதிக்கப்படும் என்றாலும் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப் பட்டால், விற்பனையில் பாதிப்பிருக்காது. இவ்வாறு கோயங்கா கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)