பதிவு செய்த நாள்
18 மார்2012
23:43
புதுடில்லி:பட்ஜெட்டில் கார்களுக்கான உற்பத்தி வரி, 22 சதவீதத்திலிருந்து, 24 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மாருதி சுசூகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஹோண்டா, டொயோட்டா போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் கார்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.
மாருதி சுசூகி இந்தியா மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா ஆகிய நிறுவனங்கள், அனைத்து மாடல் கார் விலையையும், 2-3 சதவீதம் வரை உயர்த்த போவதாக அறிவித்துள்ளன. இதன்படி, இந்நிறுவனங்களின் கார்கள் விலை, 6,000 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம், அதன் பிரையோ மாடல் காரின் விலையை, 7,000 ரூபாய் வரையும், அக்கார்டு மாடல் காரின் விலையை, 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளது.டொயோட்டா நிறு வனம், அதன் எடியோஸ் மாடலின், பெட்ரோல் மற்றும் டீசல் வகை கார்கள் விலையை முறையே, 11 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் 13 ஆயிரத்து 600 ரூபாய் வரையும், லிவா மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் வகை கார்கள் விலையை முறையே, 9,500 ரூபாய் மற்றும் 11 ஆயிரத்து 500 ரூபாய் வரையும், பார்சூன் மாடல் கார் விலையை, 80 ஆயிரம் ரூபாய் வரையும், ஆல்டிஸ் மாடல் கார் விலையை, 39 ஆயிரம் ரூபாய் வரையும், இன்னோவா மாடல் கார் விலையை, 35 ஆயிரத்து 200 ரூபாய் வரையும் உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் வர்த்தகம் மற்றும் பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளது.இது குறித்து மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவன தலைவர் பவன் கோயங்கா கூறியதாவது:சில மாதங்களாக கார் தயாரிப்பிற்கான அனைத்து மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பட்ஜெட்டில் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, கார்கள் விலையை, 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. மேலும், உற்பத்தி வரி உயர்வால் குறுகிய காலத்திற்கு கார், டிராக்டர்கள் விற்பனை பாதிக்கப்படும் என்றாலும் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப் பட்டால், விற்பனையில் பாதிப்பிருக்காது. இவ்வாறு கோயங்கா கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|