பதிவு செய்த நாள்
19 மார்2012
11:40
புதுடில்லி: இந்திய விமானச் சேவை நிறுவனங்களின் இழப்பு, அடுத்த நிதி ஆண்டில் 250 கோடி டாலரை (ரூ.12,500 கோடி) தாண்டும் என ஆசிய-பசிபிக் விமானப் போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது. சமீபகால காலமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. அடுத்த நிதி ஆண்டில் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 135 டாலராக உயரும் பட்சத்தில் விமான சேவை நிறுவனங்களின் இழப்பு 250 கோடி டாலரை தாண்டும் என தெரிகிறது. விமான சேவை நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினத்தில் எரிபொருளின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் இத்துறை நிறுவனங்களுக்கு எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்ய அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|