சில்லரை விலை பணவீக்கம் 8.83 சதவீதம்சில்லரை விலை பணவீக்கம் 8.83 சதவீதம் ... மொபைல்போன் மூலம் பல்நோக்கு வர்த்தகத்தை நடத்த திட்டம் மொபைல்போன் மூலம் பல்நோக்கு வர்த்தகத்தை நடத்த திட்டம் ...
முடிந்தது நகைக் கடைகளின் வேலை நிறுத்தம்: ரூ.1,000 கோடி 'அவுட்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2012
10:38

நகைக்கடை உரிமையாளர்கள் நடத்திய, நாடு தழுவிய கடையடைப்பால், மத்திய, மாநில அரசுகளுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயில், 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்க இறக்குமதிக்கான சுங்க வரியை 4 சதவீதமாக அதிகரித்து, உற்பத்தி வரியை 2 சதவீதமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இது, ஒரு கிராம் தங்கம் விலையில், குறைந்தபட்சம், 100 ரூபாய் வரை அதிகரித்து விடும். உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்குத் தான் சுமை என்றாலும், அதை அவர்கள், வாடிக்கையாளர்கள் தலையில் தான் இறக்கி வைப்பர்.இந்நிலையில், இந்த வரி உயர்வைக் கண்டித்து, நாடு முழுவதும் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள், சனி, ஞாயிறு, திங்கள் என, மூன்று நாட்கள் கடையடைப்பு நடத்தினர். வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு எடுத்த இந்த முடிவு, வாய்மொழியாகவே நாடு முழுவதும் பரப்பப்பட்டது. பல பேருக்குத் தகவல் தெரியாததால், சனிக்கிழமை காலையில் சிலர் கடையைத் திறந்திருந்தனர். சங்கத்தினர் சொல்லி, பிறகு கடையை அடைத்தனர்.
ரூ.1,000 கோடி இழப்பு
இது தொடர்பாக, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர், ஜெயந்திலால் ஷெலானி கூறியதாவது: ஒரு நாட்டின் பொருளாதார பலம், அந்நாட்டில் இருக்கும் தங்கத்தைப் பொறுத்தே மதிப்பிடப் படுகிறது. உலகிலேயே அதிகம் தங்கம் நுகரும் நாடுகளில் இரண்டாவது, மூன்றாவது இடங்களில், இந்தியா இருக்கிறது.
அப்படியானால், இந்தியா பொருளாதார பலத்தோடு இருக்கிறது என்று தானே பொருள். ஆனால், இந்த வரி உயர்வின் மூலம், தங்கம் இறக்குமதிக்கு முட்டுக்கட்டை போடுகிறது மத்திய அரசு.சென்னையில் மட்டுமே ஒரு நாளைக்கு, ஏறக்குறைய, 200 கோடி ரூபாய்க்கு தங்க நகை விற்கப்படுகிறது; தமிழகம் முழுவதும், 1,000 கோடி ரூபாயை எட்டும். நாடு முழுவதும் மூன்று நாள் கடையடைப்பு மூலம், மத்திய அரசுக்கு வர வேண்டிய இறக்குமதி தீர்வை, மாநில அரசுகளுக்கு வர வேண்டிய வணிக வரி என, குறைந்தபட்சம், 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.வாடிக்கையாளர் தானே செலுத்தப் போகிறார் என, நாங்கள் பேசாமல் இருந்து விடலாம். ஆனால், மத்திய அரசு தவறான திசையில் செல்கிறது என்பதை எடுத்துச் சொல்வதற்காகவே, போராட்டம் நடத்தினோம். இவ்வாறு ஜெயந்திலால் கூறினார்.
தமிழகத்தில் உள்ள நகைக்கடைகள் - 18,000 சென்னையில் மட்டும் - 4,000 :தமிழகத்தின் ஆண்டு விற்பனை - ரூ.50 ஆயிரம் கோடி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)