பதிவு செய்த நாள்
20 மார்2012
23:58
புதுடில்லி: நாட்டில், சென்ற 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, "பிராட்பேண்ட்' எனப்படும் அகண்ட அலை வரிசை சேவைக்கான இணைப்பு பெற்றோர் எண்ணிக்கை, 1.34 கோடியை தாண்டியுள்ளது என, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு இணை அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:நாட்டில், "தேசிய தொலைத் தொடர்பு கொள்கை-2012' என்ற திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம், 2 எம்.பீ.பி.எஸ்., வேகத்தில், வரும், 2017ம் ஆண்டிற்குள், 17.50 கோடி அகண்ட அலைவரிசை இணைப்புகளும், 2020ம் ஆண்டில், 60 கோடி இணைப்புகளும் வழங்க வேண்டும் என்று, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சென்ற 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, 1.34 கோடி அகண்ட அலைவரிசை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில், 23.55 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி (16.62 லட்சம்), கர்நாடகா (16.44 லட்சம்), ஆந்திரா (13.42 லட்சம்), டில்லி (10.15 லட்சம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|