பதிவு செய்த நாள்
20 மார்2012
23:59
கொச்சி: நடப்பு 2011-12ம் முழு நிதியாண்டில், நாட்டின் காபி ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், சென்ற மார்ச் 15ம் தேதி வரையிலுமாக, காபி ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 3 லட்சத்து 29 ஆயிரத்து 652 டன்னாக அதிகரித்துள்ளது. மதிப்பின் அடிப்படையில் காபி ஏற்றுமதி, 3,343 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், காபி ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் முறையே, 2 லட்சத்து 97 ஆயிரத்து 808 டன் மற்றும் 3,343 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது.ஆக, இடைப்பட்ட காலத்தில், காபி ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 10 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில், உற்பத்தியாகும் மொத்த காபியில், பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது.பிரேசிலில் காபி உற்பத்தி அபரிமிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முன்பேர சந்தையில் அரபிகா காபி விலை குறைந்துள்ளது.தற்போது, நாட்டின் காபி ஏற்றுமதி அதிகரித்துள்ள போதிலும், அரபிகா வகை காபி ஏற்றுமதி 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதனால், இவ்வகை காபி பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|