பதிவு செய்த நாள்
20 மார்2012
23:59
புதுடில்லி: கட்டுமான துறையைச் சேர்ந்த, "நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன்' (என்.பீ.சி.சி), பங்கு வெளியீட்டின் வாயிலாக, 120 கோடி ரூபாயை திரட்ட உள்ளது. இப்புதிய பங்கு வெளியீடு நாளை துவங்கி வரும் 27ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள, 10 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 120 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் ஏப்ரல் மாதம் இதன் பங்குகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1.20 கோடி பங்குகள் (முகமதிப்பு ரூ.10) விற்பனை செய்யப்பட்டு, 120 கோடி ரூபாய் திரட்டப்பட உள்ளது. பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை 90 ரூபாயாகவும், அதிகபட்ச விலை 106 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு விற்பனை வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததால், இது வரையிலும் 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.வரும் நிதியாண்டில், மத்திய அர” பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|