பதிவு செய்த நாள்
23 மார்2012
01:03
புதுடில்லி:சென்ற பிப்ரவரியில், நாட்டில் ஜி.எஸ்.எம். மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 84 லட்சத்து 40 ஆயிரம் அதிகரித்து, 66 @காடியாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.) தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.எம். சந்தையில், 27 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற பிப்ரவரியில், 10 லட்சத்து 80 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, இதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 17 கோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், 23 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ள வோடபோன் எஸ்ஸார் நிறுவனம், 8 லட்சத்து 38 ஆயிரம் பேரை இணைத்துக் கொண்டதையடுத்து, அதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 14 கோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஐடியா செல்லுலார் நிறுவனம், 16.8 சதவீத சந்தை பங்களிப்புடன், 11 லட்சம் பேருக்கு இணைப்பு வழங்கி, அதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையை, 11 கோடியாக அதிகரித்துக் கொண்டுள்ளது.சிஸ்டமா ஷியாம் நிறுவனம், எம்.டி.எஸ். பிராண்டின் கீழ், 2 லட்சத்து 32 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதையடுத்து, அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.54 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|