"2ஜி' உரிமம் ரத்து: கவலைப்படாத யூனிநார் சந்தாதாரர்கள் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -"2ஜி' உரிமம் ரத்து: கவலைப்படாத யூனிநார் சந்தாதாரர்கள் - பிசினஸ் ... ... தங்கம் மற்றும் வெள்ளிச்சந்தைக்கு இன்று விடுமுறை தங்கம் மற்றும் வெள்ளிச்சந்தைக்கு இன்று விடுமுறை ...
தங்க நகை கடனுக்கு உச்ச வரம்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2012
01:10

மும்பை:தங்க நகைகளுக்கு அவற்றின் மதிப்பில் 60 சதவீதத்திற்கு மேல் கடன் வழங்கக் கூடாது என, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தங்க நகைக் கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி அண்மை காலமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன்படி, தங்கக் கட்டிகள், தங்கம் மற்றும் தங்க நாணயங்களுக்கு கடன் வழங்க வேண்டாம் என, நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும், நிதி நிறுவனங்களின் மொத்த சொத்தில், தங்க நகைகளுக்கு வழங்கப்பட்ட கடன் எத்தனை சதவீதம் என்பதை, ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. இத்துடன், வரும் ஏப்ரல் முதல், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், (குறிப்பாக, மொத்த நிதி சொத்தில், 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் தங்க நகைக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள்), அவற்றின் சொத்தில் குறைந்தபட்சம் 12 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டிருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, தங்க நகைக் கடன் வர்த்தகத்தை பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதாக உள்ளது என்றும், இது இத்துறையில் ஈடுபட்டுள்ள நிதி நிறுவனங்களின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் எனவும் இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்க நகைக் கடன் வர்த்தகம் மீண்டும் அமைப்பு சாரா துறைக்கு சென்று விடும் என்றும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அண்மைக்காலமாக, தங்க நகைக் கடன் வர்த்தக நிறுவனங்கள் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகின்றன. வட்டிக் கடையில் தங்க நகை அடமானத்திற்கு அளிக்கும் கடனை விட, இந்நிறுவனங்கள் அதிக தொகையை வழங்குகின்றன.இதனால், முன்னேற்றம் கண்டு வரும் இந்நிறுவனங்கள் பங்கு வெளியீடு, பங்குகளாக மாறாத கடன் பத்திர வெளியீடு என பல வகைகளில் நிதி திரட்டத் தொடங்கியுள்ளன.
அதிக இடர்ப்பாடும், நிலையற்ற விலையும் கொண்ட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனங்களால், பொதுமக்களின் முதலீட்டிற்கு பாதிப்பு நேரக்கூடாது என்ற நோக்கத்தில் ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே சமயம், இத்துறை சீரான வளர்ச்சி பெறவும் இந்நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)