பதிவு செய்த நாள்
23 மார்2012
10:02
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105.20 புள்ளிகள் அதிகரித்து 17301.67 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 31.85 புள்ளிகள் அதிகரித்து 5260.30 புள்ளிகளோடு காணப் பட்டது.மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று மிகவும் மோசமாக இருந்தது. காலையில் லேசான சரிவுடன் துவங்கிய பங்கு வர்த்தகம், பிற்பகலில் பெரும் சரிவைக் கண்டது. அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. இது தவிர, சீனாவின் தயாரிப்புத் துறை வளர்ச்சி தொடர்ந்து ஐந்து வாரங்களாக சரிவடைந்து வருகிறது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கம் கண்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், மின்சாரம், உலோகம், பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை 4 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்தது. மொத்தம் 3,003 நிறுவனப் பங்குகளின் மீது வர்த்தகம் நடைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|