நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.4,310 கோடி உயர்வுநாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.4,310 கோடி உயர்வு ... ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில்... ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் சரிவு ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில்... ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தேங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2012
00:15

நாமக்கல்:தமிழகத்தில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளதால், நுகர்வோர் மகிழ்ச்சியும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில், ப.வேலூர், பரமத்தி, ஜேடர்பாளையம், பொத்தனூர், பிலிக்கல்பாளையம், சோழசிராமணி, நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மணப்பள்ளி, மோகனூர், ஒருவந்தூர் ஆகிய காவிரிக்கரையோர பகுதிகளில், 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
அங்கிருந்து பெறப்படும் உரிக்கப்பட்ட தேங்காய்கள், லாரிகள் மூலம் மும்பை, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இப்பணியில், ப.வேலூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகள் செயல்படுகின்றன. இத்தொழில் மூலம், 1,000க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், 5,000க்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
கடந்த மாதம், மும்பை மார்க்கெட்டில் ஒரு தேங்காய் ஏழு ரூபாய்க்கு விற்பனையானது. இது, தற்போது ஐந்து ரூபாய்க்கு விலை போகிறது. நான்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய காய், தற்போது மூன்று ரூபாய்க்கு விற்பனையாகிறது. லாரியில், நாளொன்றுக்கு 40 ஆயிரம் காய்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
மும்பை மார்க்கெட்டில், கடந்த ஆண்டு ஒரு லோடு தேங்காய், 2.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாது. தற்போது விலை குறைந்து, 1.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் தேங்காய்கள் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், தமிழக தேங்காய்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் நுகர்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே சமயம் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)