நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.4,310 கோடி உயர்வுநாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.4,310 கோடி உயர்வு ... ஏப்ரல் 2 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்: ஏர் இந்தியா அறிவிப்பு!! ஏப்ரல் 2 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்: ஏர் இந்தியா அறிவிப்பு!! ...
ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில்... ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2012
00:17

ஐதரபாத்:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் முதல் ஆண்டு பிரிமிய வருவாயாக, 90 ஆயிரத்து 16 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் வசூலிக்கப்பட்டதை விட, 13 சதவீதம் (1 லட்சத்து 3 ஆயிரத்து 878 கோடி ரூபாய்) குறைவாகும் என, காப்பீட்டு ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையம் (இரிடா) தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனம்:நாட்டில் பொதுத்துறையில், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.) நிறுவனமும், தனியார் துறையில், 23 நிறுவனங்களும் ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. மதிப்பீட்டு காலத்தில், தனியார் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய், அதிகபட்சமாக, 17.7 சதவீதம் குறைந்துள்ளது. எல்.ஐ.சி.நிறுவனத்தின் பிரிமிய வருவாய், 11.3 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதியம் மற்றும் பங்கு சார்ந்த காப்பீட்டு திட்டங்களை, அதிக அளவில் அறிமுகம் செய்யாத காரணத்தால் தான், அவற்றின் பிரிமிய வருவாயில், சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த 2000ம் ஆண்டில் காப்பீட்டு வணிகத்தில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.மேலும், 26 சதவீத பங்கு மூலதனத்துடன் அன்னிய நிதி நிறுவனங்களும் இந்திய காப்பீட்டு வணிகத்தில் இறங்கும் வகையில் நடவடிக்கை @மற்கொள்ளப்பட்டது.
பொது காப்பீடு:உள்நாட்டில், பொதுகாப்பீட்டு வணிகத்தில், மொத்தம் 24 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் பொதுத் துறையில் நான்கு நிறுவனங்களும், தனியார் துறையில் 20 நிறுவனங்களும் உள்ளன.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில், பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், மொத்த பிரிமிய வருவாயாக, 52 ஆயிரத்து 104 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், வசூலிக்கப்பட்டதை விட, 24 சதவீதம் (42 ஆயிரத்து 11 கோடி ரூபாய்) அதிகமாகும்.
கணக்கீட்டு காலத்தில், தனியார் துறையைச் சேர்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 26.2 சதவீதம் வளர்ச்சிகண்டு, 17 ஆயிரத்து 341 கோடியிலிருந்து, 21 ஆயிரத்து 885 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 22.5 சதவீதம் வளர்ச்சியடைந்து, 24 ஆயிரத்து 670 கோடியிலிருந்து, 30 ஆயிரத்து 219 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, இரிடா தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)