பதிவு செய்த நாள்
25 மார்2012
15:05
வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் ஏப்ரல் மாதம் முதல் 15-20 சதவீதம் வரை உயர இருக்கிறது. இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை அந்த வாகனத்திற்கு ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கினாலோ, திருடு போனாலோ, வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு படுகாயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டாலோ இன்சூரன்ஸ் மூலம் பணம் பெற முடியும். இது ஒரு தற்காப்புக்கான நடவடிக்கை தான்.
இந்நிலையில் மூன்றாவது நபர் விபத்து இன்சூரன்ஸ் தொகுப்பு நிதியை கட்டாயமாக்கி, இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் பிறப்பித்த உத்தரவு காரணமாகவும், பணவீக்கம் மற்றும் இதர காரணங்களினாலும் மோட்டார் வாகன இன்சூரன்ஸ் கட்டணம் ஏப்ரல் மாதம் முதல் 15 முதல் 20 சதவீதம் வரை உயரும் என்று தனியார் காப்பீட்டு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|