பதிவு செய்த நாள்
25 மார்2012
16:26
புதுடில்லி : குர்கானில் ரூ. 1,700 கோடி மதிப்பில் புதிதாக டீசல் இன்ஜின் ஆலையை அமைக்க இருக்கிறது மாருதி சுசூகி நிறுவனம். உலகில் உள்ள பலரும் டீசல் இன்ஜின் கார்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் பெரும்பாலான கார்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் டீசல் இன்ஜின் கார்ககளை அதிகளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. இந்தியாவில் கார்கள் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகியும் டீசல் இன்ஜின் கார்கள் உற்பத்தியில் களம் இறங்கியிருக்கிறது. இதற்காக ரூ.1700 கோடி முதலீடு செய்ய இருக்கிறது.
இதுகுறித்து மாருதி சுசூகியின் தலைவர் பார்கவா கூறுகையில், குர்கானில் இயங்கிவரும் எங்களது கார் தொழிற்சாலையில் டீசல் இன்ஜின் கார்களுக்காக புதிதாக ஆலை அமைக்க இருக்கிறோம். இதற்காக ரூ.1700 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக ரூ.950 கோடியில் ஆண்டுக்கு 1.5 லட்சம் இன்ஜின்கள் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் அடுத்தாண்டு துவங்கும். அதனைத்தொடர்ந்து 2014ம் ஆண்டில் 2வது கட்ட பணிகள் துவங்குகிறது. இதன்மூலம் மொத்த உற்பத்தி 3 லட்சமாக உயரும் என்று கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக தனியாக ரூ.900 கோடி முதலீடு செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|