சென்ற மூன்றாவது காலாண்டில் 2.26 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்சென்ற மூன்றாவது காலாண்டில் 2.26 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ... வட மாநிலத்துக்கு செல்லும் ஓசூர் கேரட் வட மாநிலத்துக்கு செல்லும் ஓசூர் கேரட் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ரயில்வே சரக்கு கட்டண உயர்வால் இட்லி அரிசி விலை உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2012
23:55

சேலம்:ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதால், இட்லி அரிசி விலை உயரும் என, தமிழக நெல் அரிசி வணிக சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலத் துணைத் தலைவர் சியாமளநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வே அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட ரயில்வே நிதி நிலை அறிக்கைக்கு முன்பாகவே, நெல், அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவு தானியங்களுக்கு, ரயில்வே போக்குவரத்து கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது.
மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டில், சென்னை, விருதுநகர், சேலம் டவுன் ரயில்வே மார்க்கெட்டுக்கு ஆண்டு முழுவதும் நெல், அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வருகின்றன.சட்டீஸ்கர் மாநிலம் டாபா என்னுமிடத்தில் இருந்து, சேலம் மார்க்கெட்டுக்கு, ஆண்டு முழுவதும் கிராந்தி என்னும் இட்லி அரிசிக்கான நெல் வந்து கொண்டு இருக்கிறது. டாபாவிலிருந்து சேலம் வருவதற்கு, ஒரு குவிண்டால் நெல்லுக்கு, 198 முதல் 200 ரூபாய் வரை வேகன் வாடகை செலுத்தி வந்தோம்.
தற்போது அறிவித்துள்ள கட்டண உயர்வால், குவிண்டாலுக்கு 262 முதல் 265 ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இட்லி அரிசி விலை கிலோவுக்கு, 1.40 ரூபாய் வரை உயரும். ஏற்கன@வ பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளாகி வரும் அரிசி ஆலை தொழில், ரயில்வே துறை அறிவிப்பால், மேலும் நலிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டுக்கு முன், இட்லி அரிசி குவிண்டால், 2,600 ரூபாய்க்கு விற்றது, தற்போது 2,750 ரூபாய்க்கு விற்கிறது. சில்லரையில் கிலோ 30 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்தள்ளது.டாபாவில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு பயண தூரம், 2,114 கி.மீ.,. ரயில் வேகன்களுக்கு, 25 கி.மீ., வரை ஒரு வாடகையும், 25 கி.மீ., முதல் 50 கி.மீ.,வரை கூடுதல் வாடகையும் நிர்ணயிக்கப்படுகிறது.
இனி, 1,500 கி.மீ., முதல், 1,750 கி.மீ., என்ற ஒரு நிலையும், 1,750 கி.மீ., முதல், 2,000 கி.மீ., வரையும், 2,000 கி.மீ., முதல் 2,500 கி.மீ., தூரம் வரை ஒரு நிலையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால், சேலம், சென்னை, விருதுநகர், கோவை போன்ற இடங்களுக்கு வரும் சரக்குகளுக்கு, 2,100 கி.மீ., தூரத்துக்கு செலுத்த வேண்டிய வாடகைக்கு பதில், 2,500 கி.மீ., தூரத்துக்கான வாடகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டாபாவில் இருந்து சேலத்துக்கு வசூலிக்கும் வாடகை தான், கன்னியாகுமரி வரை வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். உணவு தானியங்களை, "130 ஏ கிளாஸ்' என்ற நிலைக்கு திரும்பவும் கொண்டு வர மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)