சென்ற மூன்றாவது காலாண்டில் 2.26 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்சென்ற மூன்றாவது காலாண்டில் 2.26 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ... வரத்து குறைவால் ஏல சந்தைகளில் தேயிலை விலை அதிகரிப்பு - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - வரத்து குறைவால் ஏல சந்தைகளில் தேயிலை விலை அதிகரிப்பு - பிசினஸ் ... ...
வட மாநிலத்துக்கு செல்லும் ஓசூர் கேரட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2012
23:57

ஓசூர்:ஓசூரில் உற்பத்தியாகும் கேரட், வடமாநிலங்களில் ஜூஸ், அல்வா மற்றும் கேரட் சாதம் தயாரிக்க அதிகளவு அனுப்பி வைக்கப்படுகிறது. கேரட்டில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், வடமாநிலத்தவரின் உணவு வகைகளில் கேரட் தவறாமல் இடம் பெறுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ஆண்டு முழுவதும் காணப்படும் குளிர்ந்த காலநிலை, நல்ல மண்வளம் ஆகியவற்றை பயன்படுத்தி, விவசாயிகள் அதிகளவு மருத்துவ குணம் கொண்ட தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, பாகலூர், உத்தனப்பள்ளி மற்றும் தளி பகுதியில், 200 ஹெக்டேரில் விவசாயிகள் ஆண்டு முழுவதும் கேரட் சாகுபடி மேற்கொள்கின்றனர்.தமிழகத்தை பொறுத்தவரையில் கேரட் சாகுபடி பரப்பு மிக குறைவாக உள்ளது. அதனால், உற்பத்தி குறைவால் காய்கறி சந்தைகளில் ஆண்டு முழுவதும் கேரட் விலை நிலையாக காணப்படுகிறது.இதனால், ஓசூர் பகுதி விவசாயிகள் ஆர்வமுடன் கேரட் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். ஒரு ஏக்கர் கேரட் சாகுபடி செய்ய, 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. மகசூலை பொறுத்தவரையில் ஆறு டன் வரை உற்பத்தியாகிறது. ஒரு டன்னுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை கிடைப்பதால், 90 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. சாகுபடி செலவு போக, 40-50 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அன்றாட சமையலில் மட்டுமே கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. வடமாநிலங்களில் கேரட் அல்வா, கேரட் சட்னி, கேரட் சாதம், கேரட் ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு விதவிதமான உணவு வகைகள் தயாரிக்கப் படுகின்றன. கேரட்டில் உள்ள கரோட்டின் சத்து புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. குடல் புண், வயிறு வலி உள்ளவர்கள், வாரம் மூன்று முறை கேரட் சாறு அருந்தினால் நோய் குணமாகிவிடுகிறது. கேரட்டில் நார் சத்து உள்ளதால், செரிமானத்தை தூண்டி உணவு சீராக ஜீரணிக்க உதவுகிறது.
ஓசூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சீனிவாசன் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரையில் சமையலில் உணவு பிரியர்கள் கேரட்டை அதிகளவு பயன்படுத்த மாட்டார்கள். அதனால், விவசாயிகள் ஆண்டுதோறும் குறைந்த பரப்பில் மட்டுமே கேரட் சாகுபடி செய்கின்றனர். இதனால், உள்ளூர் சந்தைகள் முதல் வெளியூர் சந்தைகள் வரை கேரட் விலை எப்போதும் கிலோ, 20 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை காணப்படுகிறது. ஒருபோதும் விலை வீழ்ச்சியடையாது. குளிர்பகுதியில் மட்டுமே கேரட் வரும்என்பதால், ஓசூர் போன்ற பகுதியில் மட்டுமே கேரட் நிரந்தரமாக சாகுபடி செய்யப்படுகிறது என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)