வட மாநிலத்துக்கு செல்லும் ஓசூர் கேரட்வட மாநிலத்துக்கு செல்லும் ஓசூர் கேரட் ... கள்ளச்சந்தையில் ஐபேட் விற்பனை விறுவிறு... கள்ளச்சந்தையில் ஐபேட் விற்பனை விறுவிறு... ...
வரத்து குறைவால் ஏல சந்தைகளில் தேயிலை விலை அதிகரிப்பு - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2012
23:59

வறண்ட வானிலை மற்றும் வரத்து குறைவால், கோல்கட்டா ஏல மையத்தில், தேயிலை விலை,46 - 55 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.சென்ற ஆண்டு, முதல் தரமான அசாம் தேயிலை விலை, கிலோ 150 -200 ரூபாய் வரை சென்றது. நடப்பாண்டில், 220-280 ரூபாய் என்ற அளவில் உள்ள இத்தேயிலையின் விலை, 300 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, புதிய பருவத்தில் விளைந்த தேயிலை சந்தைக்கு வந்துள்ளது. இதை, கிலோ ஒன்றுக்கு,கூடுதலாக 50-60 ரூபாய் வைத்து விற்பனை செய்கிறோம். ஆண்டின் பிற்பாதிக்குப் பிறகு, நல்ல அளவில் மழை பொழிந்து, விளைச்சல் அதிகரிக்கும் பட்சத்தில், கிலோவுக்கு 25-30 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது என, மெக்லியாட் ரசல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆதித்ய கெய்தான் தெரிவித்தார்.
சென்ற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேயிலை உற்பத்தி தலா 30 சதவீதம் வரை குறைந்துள்ளது என, இந்திய தேயிலை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நடப்பாண்டில், இந்தியாவில், ஒட்டு மொத்த அளவில், தேயிலைக்கான பற்றாக்குறை, 5 கோடி கிலோவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் தேயிலை உற்பத்தி, 2.3 சதவீதம் உயர்ந்து, 98.80 கோடி கிலோவாக அதிகரித்த போதிலும், பயன்பாடு, 3-3.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதனால், தேயிலைக்கு பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நிலவரம்:கடந்த 2011ம் ஆண்டில், சீனா தவிர்த்த,சர்வதேச அளவிலான தேயிலை உற்பத்தி, அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் சரிவடைந்துள்ளது. உலகளவிலான தேயிலை உற்பத்தி, 1.31 சதவீதம் சரிவை சந்தித்து, 196.96 கோடி கிலோவிலிருந்து, 194.38 கோடி கிலோவாக குறைந்துள்ளது.சர்வதேச சந்தையிலும், உள்நாட்டிலும் தேயிலைக் கான தேவை அதிகரித்து வருகிறது. அதே சமயம் தேயிலைக்கு பற்றாக்குறை உள்ளதால், அதன் விலை அதிகரித்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேயிலை விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தால், தேயிலையை பாக்கெட்டில் அடைத்து விற்கும் நிறுவனங்கள், விலையை மறுபரிசீலனை செய்யும் என தெரிகிறது. பொதுவாக, இவ்வகையான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவ னங்கள், முதல் தரமான தேயிலையை கொள்முதல் செய்வதில்லை. இதனால், இந்நிறுவனங்கள் அடிக்கடி விலையை மாற்றி நிர்ணயிப்பதில்லை. ஒரு ஆண்டிற்கு முன்புதான், இந்நிறுவனங்கள், தேயிலை விலையை உயர்த் தின என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)