வரத்து குறைவால் ஏல சந்தைகளில் தேயிலை விலை அதிகரிப்பு - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -வரத்து குறைவால் ஏல சந்தைகளில் தேயிலை விலை அதிகரிப்பு - பிசினஸ் ... ... கள்ளச்சந்தையில் ஐபேட் விற்பனை விறுவிறு... கள்ளச்சந்தையில் ஐபேட் விற்பனை விறுவிறு... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா ரூ.2,000 கோடியில் புதிய தொழிற்சாலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2012
00:13

புதுடில்லி:ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுசூகி மோட்டார் கார்ப்பரேஷனின் துணை நிறுவனம், சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா. இந்நிறுவனம், ஹரியானா மாநிலத்தில், 2,000 கோடி ரூபாய் திட்ட செலவில், புதிதாக இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை துவங்கவுள்ளது.
இதற்காக, ஹரியானா மாநில அரசு, 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின், புதிய தொழிற்சாலை, முழு அளவில் செயல்படும் போது, ஆண்டுக்கு, 20 லட்சம் இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது, பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது.
இத்தொழிற்சாலையின் முதல் கட்ட பணி, 2014ம் ஆண்டு நிறைவடையும் போது, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் வாகனங் களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறும்போது, "இந்தியாவில், இரு சக்கர வாகனங்கள் துறை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதை கருத் தில் கொண்டே நிறுவனம், விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ள உள்ளது. மானேசரில் உள்ள நிறுவனத்தின் தொழிற் சாலை, ஆண்டுக்கு, 10 லட்சம் இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் திறனுடன் செயல்பட்டு வருகிறது' என்றார்.
சுசூகியின் துணை நிறுவனமாக, கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், மாருதி சுசூகி விளங்குகிறது. இந்நிறுவனத்தின், கார் உற்பத்தி மற்றும் அசெம்பிளி பிரிவில், சுசூகி நிறுவனம்,இதுவரை, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. சுசூகி நிறுவனத்திற்கு, கூர்கான் மற்றும் ஹரியானா மாநிலம் மானேசரில், இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு தொழிற் சாலையும், டீசல் இன்ஜின் தொழில் பிரிவும் உள்ளன.
மேலும், சுசூகி நிறுவனம், மானேசரில் உள்ள கார் தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காகவும், ரோட்டாவில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவிற்காகவும், 6,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. மாருதி சுசூகி, ஹரி யானா மாநிலத்திற்கு வெளியில், குஜராத்தில் ஆண்டுக்கு, 20 லட்சம் கார்கள் தயாரிக்கும் வகையில், கார் தொழிற்சாலை ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. இத்தொழிற்சாலை, 2015ம் ஆண்டிற்கு பிறகு செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியானா மாநிலத்தில், தற்போது, ஹீரோ மோட்டார்கார்ப், ஹோண்டா மோட்டார் அண்டு ஸ்கூட்டர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனமான, ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களின் வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)