வரத்து குறைவால் ஏல சந்தைகளில் தேயிலை விலை அதிகரிப்பு - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -வரத்து குறைவால் ஏல சந்தைகளில் தேயிலை விலை அதிகரிப்பு - பிசினஸ் ... ... கள்ளச்சந்தையில் ஐபேட் விற்பனை விறுவிறு... கள்ளச்சந்தையில் ஐபேட் விற்பனை விறுவிறு... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
உளுந்து, பாசிப்பயறை இருப்பு வைக்க வேண்டாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2012
00:16

கோவை: உளுந்து மற்றும் பாசிப்பயறு விலை, மே மாதம் வரை உயர வாய்ப்பில்லை என்பதால், அவற்றை இருப்பு வைக்காமல் உடனே விற்குமாறு விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலையின், வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் அறிவுரை வழங்கியுள்ளது.இது குறித்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
தமிழகத்தின் முக்கிய பயிர்களாக உளுந்து, பாசிப் பயறு உள்ளன. கடந்த ஆண்டு, இப்பயறு வகைகளின் விலை உச்சத் தில் இருந்தது. நடப்பாண்டு, உற்பத்தி குறைவு என்றாலும், விலை ஏற்ற, இறக்கமின்றி ஒரே சீராக உள்ளது.இந்திய பருப்பு வகை மற்றும் தானிய சங்கத்தின் கணிப்பின்படி, கடந்த ஆண்டை போலவே, பருப்பு வகைகளின் இறக்குமதி இருக்கும். வேளாண் அமைச்சகத்தின், நான்காவது முன்கூட்டிய மதிப்பின்படி, இந்தியாவில், சென்ற 2010-11ம் ஆண்டில், ஒட்டு மொத்த பருப்பு வகைகளின் உற்பத்தி 1.90 கோடி டன்னாக இருந்தது.
ஆனால், இது நடப்பு 2011-12ம் ஆண்டில் இரண்டாம் மதிப்பீட்டின் படி,1.70 கோடி டன்னாக சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், பருப்பு வகைகளின் தேவை, 2கோடி டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசின், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறையின் கணக்கின்படி, இம்மாத இறுதியில், பருப்பு வகைகளின் இறக்குமதி 28 லட்சம் டன் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த ஆண்டு 26 லட்சம் டன்னாக இருந்தது.
இந்த ஆண்டு, பருப்பு வகைகளின் உற்பத்தி, கடந்த ஆண்டை விட, சற்று குறைவு என்றாலும், விலைகள் சீராக இருக்கும். நான்காம் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2010-11ல், இந்தியாவின் உளுந்து உற்பத்தி, 17.40 லட்சம் டன்கள் மற்றும் பாசிப் பயறின் உற்பத்தி, 18.20 லட்சம் டன்கள். தற்போது, தாளடி உளுந்தும், பாசிப்பயறும், அறுவடை சமயத் தில் உள்ளன.விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட ஆய்வில், நடப்பாண்டு ஏப்ரல்,மே மாதங்களில், உளுந்தின் விலை கிலோ, 34-37 ரூபாய், பாசிப்பயறின் விலை, 34-36 ரூபாய் என்ற அளவில் இருக்கும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. மே இறுதி வரை, விலை ஏற வாய்ப்பு இல்லை.
எனவே, விவசாயிகள் அறுவடை செய்யும் உளுந்தையும், பாசிப்பயிறையும் சேமித்து வைக்காமல், உடன் விற்பனை செய்யும்படி, பரிந்துரைக்கப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)