வரத்து குறைவால் ஏல சந்தைகளில் தேயிலை விலை அதிகரிப்பு - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -வரத்து குறைவால் ஏல சந்தைகளில் தேயிலை விலை அதிகரிப்பு - பிசினஸ் ... ... தொடர்ந்து 15 மாதங்களாக...நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் சரிவு நிலை தொடர்ந்து 15 மாதங்களாக...நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் சரிவு நிலை ...
கள்ளச்சந்தையில் ஐபேட் விற்பனை விறுவிறு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2012
00:20

சென்னை:ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் சாதனம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் கள்ளச்சந்தையில் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. கூடுதலாக 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து, மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஐபேட் சாதனத்தை வாங்கி வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் நடப்பு மார்ச் 7ம் தேதி புதிய ஐபேட் சாதனத்தை அமெரிக்காவில் வெளியிட்டது. இந்தியா உள் ளிட்ட சில நாடுகளில் இன்னும் அதிகாரப்பூர்வமாக புதிய ஐபேட் சாதனம் விற்பனைக்கு வரவில்லை. இருந்த போதிலும், இது, கள்ளச் சந்தையில் 55 முதல்70 ஆயிரம் ரூபாய் வரை மாடல்களை பொறுத்து விலை போகிறது.இது, இந்த சாதனத்தின் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பை விட 20,000 - 25,000 ரூபாய் வரை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ரிட்சி தெருவிலும், டில்லியில் கபார், பாலிகா, கான் மார்க்கெட்டுகளிலும், மும்பையின் லாமிங்டன் சாலையிலும் இவை விற்பனையாகின்றன.
இது தவிர இபே இந்தியா, ஷாப் யுவர் வேர்ல்டு போன்ற இணையதளங்கள் மூலமாக 25 ஆயிரம் ரூபாய் கூடுதல் விலையில் இந்த சாதனத்தை அதிகாரப் பூர்வமாக உத்தரவாதத்துடன் வாங்கலாம். இந்தியாவில் வரும் மே மாதம் வெளியாக உள்ள புதிய ஐபேட் சாதனத்தின் விலை 29 ஆயிரத்து 500 ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2010ல், முதன் முதலாக ஐபேட் சாதனம் அறிமுகமானது. கையடக்க கம்ப்யூட்டர் போல், அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த சாதனத்தை வாங்க அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில், மக்கள் இரண்டு நாட்களாக கடை வாசலில் படுத்துக் கிடந்தது ஆச்சர்யமான உண்மை. முதல் நாளன்று 3 லட்சம் ஐபேட் விற்பனையானது. அடுத்து 2011ல், அறிமுகமான ஐபேட் 2 சாதனத்தின் விற்பனை, ஒரே வாரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.
தற்போது மேம்பட்ட தொழில்நுட்பத்தில், பல்வேறு வசதிகளைக் கொண்ட ஐபேட், 11 நாடுகளில் வெளியிடப் பட் டுள்ளது. இந்த சாதனம், மூன்று நாளில் 30 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி முந்தைய சாதனைகளை முறி யடித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)