பதிவு செய்த நாள்
26 மார்2012
00:20
சென்னை:ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் சாதனம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் கள்ளச்சந்தையில் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. கூடுதலாக 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து, மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஐபேட் சாதனத்தை வாங்கி வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் நடப்பு மார்ச் 7ம் தேதி புதிய ஐபேட் சாதனத்தை அமெரிக்காவில் வெளியிட்டது. இந்தியா உள் ளிட்ட சில நாடுகளில் இன்னும் அதிகாரப்பூர்வமாக புதிய ஐபேட் சாதனம் விற்பனைக்கு வரவில்லை. இருந்த போதிலும், இது, கள்ளச் சந்தையில் 55 முதல்70 ஆயிரம் ரூபாய் வரை மாடல்களை பொறுத்து விலை போகிறது.இது, இந்த சாதனத்தின் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பை விட 20,000 - 25,000 ரூபாய் வரை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ரிட்சி தெருவிலும், டில்லியில் கபார், பாலிகா, கான் மார்க்கெட்டுகளிலும், மும்பையின் லாமிங்டன் சாலையிலும் இவை விற்பனையாகின்றன.
இது தவிர இபே இந்தியா, ஷாப் யுவர் வேர்ல்டு போன்ற இணையதளங்கள் மூலமாக 25 ஆயிரம் ரூபாய் கூடுதல் விலையில் இந்த சாதனத்தை அதிகாரப் பூர்வமாக உத்தரவாதத்துடன் வாங்கலாம். இந்தியாவில் வரும் மே மாதம் வெளியாக உள்ள புதிய ஐபேட் சாதனத்தின் விலை 29 ஆயிரத்து 500 ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2010ல், முதன் முதலாக ஐபேட் சாதனம் அறிமுகமானது. கையடக்க கம்ப்யூட்டர் போல், அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த சாதனத்தை வாங்க அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில், மக்கள் இரண்டு நாட்களாக கடை வாசலில் படுத்துக் கிடந்தது ஆச்சர்யமான உண்மை. முதல் நாளன்று 3 லட்சம் ஐபேட் விற்பனையானது. அடுத்து 2011ல், அறிமுகமான ஐபேட் 2 சாதனத்தின் விற்பனை, ஒரே வாரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.
தற்போது மேம்பட்ட தொழில்நுட்பத்தில், பல்வேறு வசதிகளைக் கொண்ட ஐபேட், 11 நாடுகளில் வெளியிடப் பட் டுள்ளது. இந்த சாதனம், மூன்று நாளில் 30 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி முந்தைய சாதனைகளை முறி யடித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|