கள்ளச்சந்தையில் ஐபேட் விற்பனை விறுவிறு...கள்ளச்சந்தையில் ஐபேட் விற்பனை விறுவிறு... ... தமிழக பட்ஜெட் தாக்கல் : ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட் தாக்கல் : ஓ.பன்னீர்செல்வம் ...
தொடர்ந்து 15 மாதங்களாக...நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் சரிவு நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2012
00:22

புதுடில்லி:நாட்டின், இயற்கை எரிவாயு உற்பத்தி,தொடர்ந்து, 15 மாதங்களாக குறைந்துள்ளது என, மத்திய பெட்ரோ லியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இயற்கை எரிவாயு இறக்குமதியில் காணப்படும் சீரற்ற நிலை, அதற்கான தேவை, விலை, சப்ளை செய்யும் நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்துள்ளது.
இயற்கை எரிவாயு:இந்நிலையில், நடப்பாண்டின், சென்ற பிப்ரவரி மாதத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி, 361 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 7.7 சதவீதம் (391 கோடி கன மீட்டர்) குறைவாகும்.உள்நாட்டில், இயற்கை எரிவாயு உற்பத்தியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது.இந்நிறுவனம், கிருஷ்ணா -கோதாவரி படுகை யைச் சேர்ந்த, டி6 பகுதியில், இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்து வருகிறது. இங்கு, உற்பத்தி குறைந்ததால், ஒட்டு மொத்த அளவில், நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி குறைந்துள்ளது.
கடந்த 2010-11ம் நிதி ஆண்டில், நாளொன்றுக்கு சராசரியாக, 16.20 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டது.இதில், டி.6 பகுதியின் பங்களிப்பு, 5.60 கோடி கன மீட்டராக இருந்தது. அதேசமயம், 2011-12ம் நிதி ஆண்டில், டி6 பகுதியில், இயற்கை எரிவாயு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.வரும் 2012-13 மற்றும் 2013-14ம் நிதி ஆண்டுகளில், டி6 பகுதியில், நாளொன்றுக்கு, 3.40-3.60 கோடி கன மீட்டர் அளவிற்கே இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில், டி6 பகுதியில், வரும் 2013-14ம் ஆண்டில், இயற்கை எரிவாயு உற்பத்தி, நாளொன்றுக்கு 2.20 கோடி கன மீட்டராக குறையும் என்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் 2012-13ம் நிதிஆண்டில், எரிவாயு உற்பத்தி, நாளொன்றுக்கு 2.76 கோடி கனமீட்டர் என்றளவில் இருக்கும் என, ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே மதிப்பீடு செய்திருந்தது. இதே, டி6 பகுதியில், கடந்த 2009ம் ஆண்டில், நாளொன்றுக்கு, 6 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் :சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 30 லட்சம் டன்னாக சற்று அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 0.4 சதவீதம் (29 லட்சம் டன்) அதிகமாகும். மதிப்பீட்டு மாதத்தில், அசாம் மாநிலத்தில் உள்ள எண்ணெய் வயல்களில், கச்சா எண்ணெய் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மும்பை வடமேற்கு பகுதியில், பொதுத் துறையைச் சேர்ந்த ஒ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் வயல் உள்ளது. இது, உள்நாட்டில் உற்பத்தியாகும் மொத்த கச்சா எண்ணெயில், 42 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
இங்கு, சென்ற பிப்ரவரியில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 13 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 0.9 சதவீதம் சற்று குறைவாகும்.
சுத்திகரிப்பு:நாட்டில், பொதுத் துறையைச் சேர்ந்த 17 சுத்திகரிப்பு ஆலைகளும், தனியார் துறையைச் சேர்ந்த இரண்டு சுத்திகரிப்பு ஆலைகளும் செயல்படுகின்றன. இவ்வாலைகள், சென்ற பிப்ரவரியில், மொத்தம் 1.41 கோடி டன் சுத்தி கரிக்கப்பட்ட எண்ணெயை உற்பத்தி செய்துள்ளன. இது, இதற்கு முந்தைய 2011ம் ஆண்டின் இதே மாதத்தில், மேற் கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 6.2 சதவீதம் (1.3 கோடி டன்) அதிகமாகும்.
இதே மாதத்தில், குஜராத் ஜாம்நகரில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலையில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் உற்பத்தி, 8 சதவீதம் உயர்ந்து, 28.3 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என, பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)