பதிவு செய்த நாள்
26 மார்2012
11:33
சென்னை : 2012-2013ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, இயற்கை மாநில மீட்பு பேரிடர் குழு அமைக்கப்படும், விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக ரூ.790.18 கோடி ஒதுக்கீடு, தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்க செய்வதற்காக புதிய திட்டத்திற்காக ரூ.193.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய மின்னாளுமை கொள்கை விரைவில் வெளியீடு; நகர்புற வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு, புயலால் பாதிக்கப்பட்ட குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றித்தர திட்டம், கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் கான்கிரீட் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு; ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|