பதிவு செய்த நாள்
26 மார்2012
12:58
சென்னை: 2012-2013ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், சமையல் எரிவாயு, உரம், பூச்சிகொல்லி மருந்துகளுக்கு முழுவதுமாக மதிப்புக்கூட்டு வரி ரத்து;: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.720 கோடி நிதி ஒதுக்கீடு; மெட்ரோ ரயிலுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு;ரூ.103.48 கோடி விளையாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது; 60 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்; மருத்து துறைக்கு ரூ.5569.28 கோடி ஒதுக்கீடு; மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்; தாய் சேய் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; பெண்களின் சுகாதார மேம்பாட்டிற்கு சேனிடரி நேப்கின்கள் வழங்க ரூ.55 கோடி ஒதுக்கீடு; ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் உயர்த்தப்படும்; மருத்துவ கட்டமைப்புக்களுக்கு கூடுதல் நிதி; அறுவை சிகிச்சை நிலையங்கள் ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தப்படும்; மதுரை, கோவை அரசு மருத்துவமனைகளில் ரூ.15 கோடி செலவில் புற்றுநோய் சிறப்பு மருத்துவ மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளது; ரூ.366.70 கோடி ஒதுக்கீட்டில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க சிறப்பு ஊக்கத்தொகை; ரூ.328 கோடி செலவில் சிறப்பு சீறுடை; கன்னியாக்குமரியில் உள்ள காமராஜர் மண்டலம் புதுப்பிக்கப்படும்; சென்னையில் உள்ள காமராஜர் வீடு பராமரிக்கப்படும்; ரூ.136.50 கோடி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்; 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச நோட், புத்தகங்கள்; ரூ.14552 கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|