பதிவு செய்த நாள்
27 மார்2012
00:40
மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. பணவீக்கம் அதிகரித்து வருவது சுங்க வரி மற்றும் சேவை வரி அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த ஐந்து வாரங்களாக சந்தை சுணக்கமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல் விலையும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது, பணவீக்கத்தை மேலும் அதிகப்படுத்தும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். சீனாவில் தொழில் துறை வளர்ச்சியில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் லாபத்துடன் முடிவடைந்தன.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளின் விலையும் வீழ்ச்சி கண்டிருந்தன. குறிப்பாக, ரியல் எஸ்டேட், மின்சாரம், வங்கி, பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 308.96 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,052.78 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,377.59 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,021.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 93.95 புள்ளிகள் சரிவடைந்து, 5,184.25 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|