பதிவு செய்த நாள்
27 மார்2012
00:40
புதுடில்லி : தங்க நகை இறக்குமதி வரி உயர்வை எதிர்த்து, ஒன்பது நாட்களாக நடைபெற்ற நகை கடை அடைப்பு போராட்டத்தில், 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, கடந்த 16ம் தேதி தாக்கல் செய்த 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தங்க இறக்குமதி வரி, 2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், பிராண்டு இல்லாத ஆபரணங்களுக்கு 1 சதவீத உற்பத்தி வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வால், தங்க நகைகளின் விலை 6 சதவீதம் வரை உயர்ந்து, வியாபாரம் பாதிக்கப்படும் என கூறி, நகை கடைக்காரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
வரிவிதிப்பை வாபஸ் பெற வேண்டும் என, நாடு தழுவிய அளவில் நகை கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் சென்னை, கோல்கட்டா நகரங்களில் நகைக்கடைகள் திறக்கப்பட்டு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த கடையடைப்பு போராட்டத்தில், 11 ஆயிரம் கோடி ரூபாய்வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித் தனர்.
ஐந்து லட்சம் சிறு நகை வியாபாரிகளையும், நுகர்வோரையும் பாதிக்கும் வரி விதிப்பை கைவிட வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு அகில இந்திய நகை வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில், ஜனவரி முதல் நடப்பு மார்ச் மாதம் வரை தங்கம் இறக்குமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 56 சதவீதம் குறைந்து 125 டன்னாக சரிவடையும் என, மும்பை தங்கநகை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் பிரித்திவிராஜ் கோத்தாரி தெரிவித்துள்ளார்.
சென்ற 2011ம் ஆண்டு ஜனவரி-மார்ச் மாதங்களில் 283 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. முழு நிதியாண்டில், 969 டன் தங்கம் இறக்குமதியானதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|