ரினாக் இந்தியா நிறுவனம் உணவு பதப்படுத்தலுக்கு முக்கியத்துவம்ரினாக் இந்தியா நிறுவனம் உணவு பதப்படுத்தலுக்கு முக்கியத்துவம் ... பொதுத் துறை நிறுவனங்கள்... மத்திய அரசுக்கு ரூ.16,767 கோடி டிவிடெண்ட் பொதுத் துறை நிறுவனங்கள்... மத்திய அரசுக்கு ரூ.16,767 கோடி டிவிடெண்ட் ...
தங்க நகை கடைகள் மூடப்பட்டதால் ஒன்பது நாளில் ரூ.11,000 கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2012
00:40

புதுடில்லி : தங்க நகை இறக்குமதி வரி உயர்வை எதிர்த்து, ஒன்பது நாட்களாக நடைபெற்ற நகை கடை அடைப்பு போராட்டத்தில், 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, கடந்த 16ம் தேதி தாக்கல் செய்த 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தங்க இறக்குமதி வரி, 2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், பிராண்டு இல்லாத ஆபரணங்களுக்கு 1 சதவீத உற்பத்தி வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வால், தங்க நகைகளின் விலை 6 சதவீதம் வரை உயர்ந்து, வியாபாரம் பாதிக்கப்படும் என கூறி, நகை கடைக்காரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
வரிவிதிப்பை வாபஸ் பெற வேண்டும் என, நாடு தழுவிய அளவில் நகை கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் சென்னை, கோல்கட்டா நகரங்களில் நகைக்கடைகள் திறக்கப்பட்டு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த கடையடைப்பு போராட்டத்தில், 11 ஆயிரம் கோடி ரூபாய்வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித் தனர்.
ஐந்து லட்சம் சிறு நகை வியாபாரிகளையும், நுகர்வோரையும் பாதிக்கும் வரி விதிப்பை கைவிட வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு அகில இந்திய நகை வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில், ஜனவரி முதல் நடப்பு மார்ச் மாதம் வரை தங்கம் இறக்குமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 56 சதவீதம் குறைந்து 125 டன்னாக சரிவடையும் என, மும்பை தங்கநகை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் பிரித்திவிராஜ் கோத்தாரி தெரிவித்துள்ளார்.
சென்ற 2011ம் ஆண்டு ஜனவரி-மார்ச் மாதங்களில் 283 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. முழு நிதியாண்டில், 969 டன் தங்கம் இறக்குமதியானதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)