பதிவு செய்த நாள்
27 மார்2012
10:30
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 177.56 புள்ளிகள் அதிகரித்து 17230.34 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 48.80 புள்ளிகள் அதிகரித்து 5233.05 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான நெற்று மிகவும் மோசமாக இருந்தது. பணவீக்கம் அதிகரித்து வருவது சுங்க வரி மற்றும் சேவை வரி அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த ஐந்து வாரங்களாக சந்தை சுணக்கமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலையும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது, பணவீக்கத்தை மேலும் அதிகப்படுத்தும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். சீனாவில் தொழில் துறை வளர்ச்சியில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் லாபத்துடன் முடிவடைந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|