இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததுஇந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது ... வரி உயர்வால் விழி பிதுங்கும் சைக்கிள் உற்பத்தியாளர்கள் வரி உயர்வால் விழி பிதுங்கும் சைக்கிள் உற்பத்தியாளர்கள் ...
மதுபானங்கள் மூலம் அரசுக்கு வருவாய் ரூ.20 ஆயிரம் கோடி இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2012
12:15

சென்னை: வரும் ஆண்டில், மதுபானங்கள் மூலம் அரசுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் வர வேண்டுமென, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"டாஸ்மாக்' கடைகள் மற்றும் இதர வகைகளில், மது விற்பனை மூலம், அரசுக்கு ஆயத்தீர்வை மூலமும், விற்பனை வரி மூலமும் வருவாய் கிடைத்து வருகிறது. ஆயத்தீர்வை மூலம், ஆண்டுக்கு வரி வருவாய், 16 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. கடந்த 2010-11ம் ஆண்டில், ஆயத்தீர்வை மூலம், 8115 கோடியே 90 லட்ச ரூபாயும், விற்பனை வரி மூலம், 6,849 கோடியே 52 லட்ச ரூபாயும் என, மது விற்பனை மூலம் மட்டும் அரசுக்கு, 14 ஆயிரத்து 965 கோடியே 42 லட்ச ரூபாய் கிடைத்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கு, 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஆயத்தீர்வை மூலம் மட்டும், 9,891 கோடி ரூபாய் வர வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வரும் நிதியாண்டில், இந்த இலக்கு இன்னும் அதிகரிக்கப்பட்டு, 20 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஆயத்தீர்வை மூலம் மட்டும், 11 ஆயிரத்து 473 கோடி ரூபாய் வரவேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தரமான மது வகைகள் விற்பனை, சரியான விலைக்கு விற்பனை, பார்களில் கூடுதல் விலை, டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் போன்றவற்றை சரி செய்தால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும். இல்லாவிட்டால், வேறு வகையான போதைகளை மக்கள் தேடிப் போகவும் வாய்ப்புள்ளது.
அபகரிக்கப்பட்ட ரூ.724.22 கோடி நிலங்கள் மீட்பு: தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அதிகளவில் தனியார் நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்பு செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதில், தற்போதய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இம்மாத நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 30,071 நில அபகரிப்பு புகார்கள் பதிவாகியுள்ளன. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 724.22 கோடி ரூபாய் மதிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
போலீசை நவீனப்படுத்த பணம் இல்லை: காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், நவீன ஆயுதங்கள், போக்குவரத்து போலீசுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு, சி.சி.டி.என்.எஸ்., திட்டம் உள்ளிட்டவற்றிற்கு கடந்த 2011-12ம் ஆண்டு திருத்த பட்ஜெட்டில் இத்திட்டத்தில், 54 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது வரை இத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து 77.29 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்தாண்டில் காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)