மதுபானங்கள் மூலம் அரசுக்கு வருவாய் ரூ.20 ஆயிரம் கோடி இலக்குமதுபானங்கள் மூலம் அரசுக்கு வருவாய் ரூ.20 ஆயிரம் கோடி இலக்கு ... சி.எஸ்.சி. ஸ்காலர்ஷிப் தேர்வு சி.எஸ்.சி. ஸ்காலர்ஷிப் தேர்வு ...
வரி உயர்வால் விழி பிதுங்கும் சைக்கிள் உற்பத்தியாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2012
13:39

பஞ்சாப் மாநிலம் லுதியானா, சைக்கிள் உற்பத்திக்கு பெயர் போனது. இந்தியாவில் உற்பத்தியாகும் சைக்கிள்களில் 90 சதவீதம் இங்கிருந்து தான் கிடைக்கின்றன. ஹீரோ சைக்கிள்ஸ், அவான் சைக்கிள்ஸ், ஹை -பேர்டு போன்ற பிரபல சைக்கிள் நிறுவனங்கள் இங்கு தான் செயல்படுகின்றன.ஆனால், சீனாவில் இருந்து சைக்கிள் இறக்குமதி செய்யப்படுவது, லுதியானா சைக்கிள் நிறுவனங்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இருந்து கடந்த 2008-09ம் ஆண்டில் ரூ.300 கோடிக்கு சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இது கடந்த நிதியாண்டில், ரூ.1600 கோடி என அதிகரித்து விட்டது. இத்துடன், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சைக்கிள்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இப்படி இரண்டு வகையிலும் பாதிக்கப்பட்ட சைக்கிள் உற்பத்தியாளர்கள், சீனா சைக்கிள்கள் இறக்குமதியை தடுக்க, பொருள் குவிப்பு தடுப்பு வரியை சுமத்த வேண்டும் என்று மத்திய அரசை கோரி வந்தன. ஆனால், சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட பொது பட்ஜெட்டில், உள்நாட்டு சைக்கிகள் உற்பத்தியை பாதிக்கும் அளவுக்கு அறிவிப்புகள் காணப்படுகின்றன.
பொதுவான கலால் வரி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர சைக்கிள்கள் மீதான கலால் வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சேவை வரியும் 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரச்னை இத்துடன் முடியவில்லை. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்கள் மீதான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும், சைக்கிள் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இப்படி பலவகையிலும், சைக்கிள்கள் மீது, தனித்தனியாக வரி பாதிப்பு காணப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் சைக்கிள்களுக்கு தேவையான உதிரி பாகங்களில் பெரும்பாலானவை, சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், உதிரி பாகங்கள் மீதான வரியை 10 சதவீதம் உயர்த்தி இருப்பது, சைக்கிள் உற்பத்தியாளர்களை பெரிதும் கவலையடைய செய்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் சைக்கிள் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஓரளவுக்கு மட்டுமே, சீன சைக்கிள்களை தடுக்கும். அவர்கள் மாற்று வழியை கடைப்பிடிப்பாளர்கள் என்றும் சைக்கிள் உற்பத்தியாளர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை, சைக்கிள் என்பது ஏழைகளின் வாகனம். இந்த வரி உயர்வு, சைக்கிள் விலை 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தி விடும் என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)