பதிவு செய்த நாள்
28 மார்2012
00:01
சென்னை: ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், "செவர்லெட் டவேரா நியோ-3' என்ற புதிய காரை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் லோவெல் சி.பேடாக் கூறியதாவது:நிறுவனம், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், கார்களை அறிமுகம் செய்வதில் முன்னோடியாக திகழ்கிறது. ஏற்கனவே உள்ள டவேரா பெயரில், புதிய டவேரா நியோ-3 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 2.0 லிட்டர் டி.சி.டி.ஐ. இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும், 85 சதவீத வாகனங்கள் கடன் வசதி அடிப்படையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. வட்டி உயர்வு, பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால், மோட்டார் வாகனத் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறை, வரும் ஜூன் மாதம் முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புதிய காரின் விலை, மாடல்களை பொறுத்து, 7.51 லட்சம் முதல் 10.34 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|