பதிவு செய்த நாள்
28 மார்2012
00:06
மும்பை: பொதுத் துறையை சேர்ந்த நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (என்.பீ.சி.சி) நிறுவனத்தின் பங்கு வெளியீடு நேற்றுடன் முடிவடைந்தது. இறுதி நாள் நிலவரப்படி, இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, 120 சதவீதத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன.என்.பீ.சி.சி. நிறுவனம் கட்டுமான திட்ட நிர்வாகத்திற்கான ஆலோசனை, மின்சாரம், ரியல் எஸ்டேட் துறைகளின் மேம்பாட்டிற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிறுவனம் அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு @தவையான நிதியை திரட்டிக் கொள்வதற்காக, பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.இந்நிறுவனம் பங்கு ஒன்றை 90 - 106 ரூபா# என்ற விலையில் நிர்ணயம் öŒ#திருந்தது. இப்பங்கு வெளியீடு சென்ற 23ம் தேதி துவங்கியது. இறுதி நாளான நேற்று, பங்குகள் வேண்டி 120 சதவீதத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. 1.40 கோடி பங்குகளுக்கு, 153.60 கோடி ரூபாய் மதிப்பிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்தன. மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள, 10 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 120 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|