டி.வி.எஸ். குழுமம் இங்கிலாந்து நிறுவனத்தை கையகப்படுத்தியது டி.வி.எஸ். குழுமம் இங்கிலாந்து நிறுவனத்தை கையகப்படுத்தியது ... உலக உருக்கு உற்பத்தி 12 கோடி டன் உலக உருக்கு உற்பத்தி 12 கோடி டன் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முன்பேர வர்த்தகம் ரூ.174 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2012
00:08

புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டின் மார்ச் 15ம் தேதி வரையிலுமாக, இந்தியாவில் உள்ள முன்பேர சந்தைகளில், 173.69 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை விட, 54 சதவீதம் அதிகம் (113 லட்சம் கோடி ரூபாய்) என, பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.) தெரிவித்துள்ளது.தங்கம் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 91 சதவீதம் வளர்ச்சி கண்டு, 51.70 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 98.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.வேளாண் பொருட்கள் மீதான வர்த்தகம், 49 சதவீதம் அதிகரித்து, 13.61 லட்சம் கோடியிலிருந்து, 20.33 லட்சம் கோடி ரூபாயாகவும், எரிசக்தி, கச்சா எண்ணெய் மீதான வர்த்தகம், 24 சதவீதம் உயர்ந்து, 22 லட்சம் கோடியிலிருந்து, 27.36 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 7 சதவீதம் உயர்ந்து, 27.40 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு மார்ச் மாதம், 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலுமாக, எம்.சி.எக்ஸ். நிறுவனத்தில், 6.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர, என்.சி.டீ.இ.எக்ஸ். (85 ஆயிரத்து 588 கோடி ரூபாய்), என்.எம்.சி.இ. (25 ஆயிரத்து 807 கோடி ரூபாய்), ஐ.சி.இ.எக்ஸ். (8,912 கோடி ரூபாய்), ஏ.சி.இ. டெரிவேட்டிவ்ஸ் அண்டு கமாடிட்டீஸ் (6,706 கோடி ரூபாய்) ஆகிய முன்பேர சந்தைகளிலும் அதிகளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.தற்போது, உள்நாட்டில் தேசிய அளவில், ஐந்து முன்பேர சந்தைகளும், மாநில அளவில், 16 முன்பேர சந்தைகளும் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)