பதிவு செய்த நாள்
28 மார்2012
00:11
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்க்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. மாத அடிப்படையிலான முன்பேர பங்கு வியாபாரம், வரும் வியாழக்கிழமையுடன் நிறைவு பெறு வதையொட்டி, பங்கு வர்த்தகத்தில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது.இருப்பினும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் 1 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது. இது தவிர, இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் 2 சதவீத அளவிற்கு உயர்வு கண்டது. இதன் தாக்கம், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மொத்தம் உள்ள 14 துறைகளில், 13 துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக, உலோகம், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, அதிகத் தேவை இருந்தது. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர் பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 204.58 புள்ளிகள் அதிகரித்து, 17,257.36 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,366.84 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,061.16 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 58.90 புள்ளிகள் உயர்ந்து, 5,243.15 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 5,277.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,184.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|