பதிவு செய்த நாள்
28 மார்2012
09:41
புதுடில்லி: கோவா மாநிலத்தை பின்பற்றி டில்லி மாநிலத்திலும் வாட் வரியை குறைத்ததன் காரணமாக லிட்டர் ஒன்றிற்கு பெட்ரோல் விலை ரூ.15 வரை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிக அதிகமானதாகும். கோவா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக பதவியேற்ற மனோகர் பாரிக்கர் பெட்ரோல் மீதான வாட் வரியை ரத்து செய்தார். இதனால் 65 ரூபாய் வரையில் விற்று வந்த பெட்ரோலின் விலை 55 ஆக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த உத்தரவு வரும் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் மாநிலங்கள் தங்களின் வருவாயை பெருக்கி கொள்வதற்காக வாட் வரியை விதிக்கிறது என்றார்.அதே வேளையில் பாண்டிச்சேரியில் 15 சதவீத அளவிற்கும் ஆந்திராவில் 33 சதவீத அளவிற்கும் வரியை விதி்க்கிறது. மத்திய அரசு எந்த வித வரியையும் விதிக்காமல் பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 39-ம் டீசல் 33.51-க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.14.12க்கும் விற்பனை செய்கிறது. ஆனால் பல்வேறு மாநிலங்கள் வாட் வரியை விதிப்பதன் மூலம் ரூபாய் 26.55 விலை உயர்வதால் விலை அதிகரித்து காணப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்நிலையி்ல் பார்லி.,விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில் மாநிலங்கள் வரி விதிப்பதன் மூலம் சுமார் ரூ.1.6லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|