பதிவு செய்த நாள்
28 மார்2012
11:08
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 106.37 புள்ளிகள் குறைந்து 17150.99 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 32.30 புள்ளிகள் குறைந்து 5210.85 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. மாத அடிப்படையிலான முன்பேர பங்கு வியாபாரம், வரும் வியாழக்கிழமையுடன் நிறைவு பெறு வதையொட்டி, பங்கு வர்த்தகத்தில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது.இருப்பினும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் 1 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது. இது தவிர, இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் 2 சதவீத அளவிற்கு உயர்வு கண்டது. இதன் தாக்கம், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|