பதிவு செய்த நாள்
28 மார்2012
15:19
உலகம் முழுவதும், தீயணைப்பு துறைக்கு என பிரத்யேக வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வாகனங்கள் பல சிறப்பு அம்சங்களும் இடம் பெற்று இருக்கும். ஆனால், நகரப்பகுதிகளிலும், குடிசை பகுதிகளிலும், குறுகலான தெருக்கள் வழியாக, தீயணைப்பு வண்டியை கொண்டு செல்வது என்பது தீர்க்க முடியாத பிரச்னையாகவே இருந்து வருகிறது. தீயணைப்பு பணி தாமதமாவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
இப்பிரச்னைக்கு, ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தீர்வு கண்டுள்ளது. இதன்படி, ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரா 350 சிசி பைக், இதற்காக பிரத்யேகமாக சில மாற்றங்களை பெற்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் விலை ரூ.7 லட்சம். இதில் 346 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பின் பகுதியில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய ரக டேங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் தண்ணீர் அல்லது தீயை அணைக்க உதவும் நுரை ஆகியவற்றை எடுத்து செல்லலாம். குறுகலான தெருக்களிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், புகுந்து புகுந்து செல்வதற்கு இந்த பைக் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்த பைக்கில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் செல்ல முடியும்.இந்த பைக் முதல் கட்டமாக , மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 பைக்குகள் அவர்களிடம் தற்போது உள்ளது. இந்தியாவின் பிற நகரப்பகுதிகளுக்கும், இந்த தீயணைப்பு பைக் விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|