டில்லியிலும் பெட்‌ரோல் விலை குறைகிறதுடில்லியிலும் பெட்‌ரோல் விலை குறைகிறது ... மத்திய அரசு ரூ.3.79 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம் மத்திய அரசு ரூ.3.79 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இருசக்கர தீயணைப்பு வாகனம் ராயல் என்ஃபீல்டு அசத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2012
15:19

உலகம் முழுவதும், தீயணைப்பு துறைக்கு என பிரத்யேக வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வாகனங்கள் பல சிறப்பு அம்சங்களும் இடம் பெற்று இருக்கும். ஆனால், நகரப்பகுதிகளிலும், குடிசை பகுதிகளிலும், குறுகலான தெருக்கள் வழியாக, தீயணைப்பு வண்டியை கொண்டு செல்வது என்பது தீர்க்க முடியாத பிரச்னையாகவே இருந்து வருகிறது. தீயணைப்பு பணி தாமதமாவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
இப்பிரச்னைக்கு, ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தீர்வு கண்டுள்ளது. இதன்படி, ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரா 350 சிசி பைக், இதற்காக பிரத்யேகமாக சில மாற்றங்களை பெற்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் விலை ரூ.7 லட்சம். இதில் 346 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பின் பகுதியில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய ரக டேங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் தண்ணீர் அல்லது தீயை அணைக்க உதவும் நுரை ஆகியவற்றை எடுத்து செல்லலாம். குறுகலான தெருக்களிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், புகுந்து புகுந்து செல்வதற்கு இந்த பைக் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்த பைக்கில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் செல்ல முடியும்.இந்த பைக் முதல் கட்டமாக , மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 பைக்குகள் அவர்களிடம் தற்போது உள்ளது. இந்தியாவின் பிற நகரப்பகுதிகளுக்கும், இந்த தீயணைப்பு பைக் விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)