டில்லியிலும் பெட்‌ரோல் விலை குறைகிறதுடில்லியிலும் பெட்‌ரோல் விலை குறைகிறது ... உருக்கு உற்பத்தி 6.40 கோடி டன் உருக்கு உற்பத்தி 6.40 கோடி டன் ...
மத்திய அரசு ரூ.3.79 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2012
02:32

புதுடில்லி : மத்திய அரசு, வரும் 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 3 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளது. இது, வரும் நிதியாண்டில், மத்திய அரசு வாங்க திட்டமிட்டுள்ள கடனில் 65 சதவீதமாகும்.
மத்திய அரசின் 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 90 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்படும் பட்சத்தில், கடன் தொகை 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி உயரதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில், மத்திய அரசு வாங்க உள்ள கடன் குறித்து முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மதிப்பீட்டு காலத்தில், மத்திய அரசின் நிகர கடன் 2 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிகர கடன் தொகையில் 60 சதவீதமாகும்.
இந்நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, அதிக அளவில் முதலீடு குவிந்து, வருவாய் அதிகரிக்கும் என்று மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் ஆர்.கோபாலன் தெரிவித்துள்ளார். இது போன்ற காரணங்களால், பட்ஜெட்டில் மதிப்பிட்டதை விட, குறைவான அளவிற்கே அரசு கடன் வாங்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)