பதிவு செய்த நாள்
30 மார்2012
00:03
புகையிலை கையிருப்பு அதிகமாக உள்ளதால், ஆந்திராவின் முக்கிய ஏல மையங்களில் இதன் விலை சரிவடைந்துள்ளது. மேலும், ஏலத்தில் பங்கு கொள்ளும் வர்த்தகர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.புகையிலை உற்பத்தியில், ஆந்திராவின், பிரகாசம், கம்மம், கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இங்கு, ஒரு கிலோ புகையிலை மிக அதிகமாக, 120 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வந்தது. இது தற்போது, 98-100 ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதற்கு, புகையிலை வாரியம் தான் முக்கிய காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏனெனில், விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த, எவ்வித நடவடிக்கையும் வாரியம் எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
மார்ச் 23ம் தேதி வரை, ஏல மையங்களின் வாயிலாக, 41.20 லட்சம் கிலோ புகையிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், பிரகாசம் மாவட்டத்திலிருந்து உற்பத்தியாகும் புகையிலையின் பங்களிப்பு மட்டும், 36.20 லட்சம் கிலோவாக உள்ளது என புகையிலை வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|