பதிவு செய்த நாள்
30 மார்2012
00:08
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்றும் சுணக்கமாகவே இருந்தது. மாதாந்திர அடிப்படையிலான முன்பேர வர்த்தகத்தின் கணக்கு முடிப்பையொட்டி, வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. மேலும், அமெரிக்கா, எச்-1பீ விசா கட்டணத்தை உயர்த்தியதால், சர்வதேச அளவிலும் பங்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
கிரீஸ் நாடு, அதன் கடன் நெருக்கடிக்குத் தீர்வு காண, மீண்டும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது. இது குறித்த தகவலால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம், 0.9 சதவீதமும், இதர ஆசிய பங்குச் சந்தைகளில், 1 சதவீத அளவிற்கும் சரிவைக் கண்டன. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது. இருப்பினும், ஜிந்தால் ஸ்டீல், டாட்டா பவர், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 63.01 புள்ளிகள் சரிவடைந்து, 17,058.61 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,109.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 16,920.61 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 15.90 புள்ளிகள் குறைந்து, 5,178.85 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக 5,194.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,135.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|