பதிவு செய்த நாள்
30 மார்2012
10:24
புதுடில்லி: இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் இமெயிலை பயன்படு்த்த துவங்கியுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்ஸாஸ் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் பிஸ்வார்ப் பானர்ஜி கூறியதாவது: சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சுமார் 68 சதவீத மக்கள் இமெயிலை அனுப்பவதிலும், பெறுவதிலும் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர்.2012-ம் ஆண்டில் இணைய தளத்தை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 103.6 மில்லியனாக உள்ளது. அவை 2015-ம் ஆண்டிற்குள் 221.6மி்ல்லியனாக அதிகரி்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். குறைந்தபட்சம் நாள் ஒன்றிற்கு 40 சதவீத மக்கள் இணையதளத்தை பார்வையிடுகி்ன்றனர். அதே சமயம் இணைய தளத்தை அதிகம்பயன்படுத்தும் பத்து நாடுகளின் வரிசையில் ஹங்கேரி 94 சதவீதத்துடன் முதலிடத்தையும் , சுவீடன்92 சதவீதம், பெல்ஜியம்,இந்தோனேஷியா நாடுகள் 91 சதவீதம், அர்ஜென்டைனா, போலந்து நாடுகள் 90 சதவீதம், பேர் பயன்படுத்தவருகின்றனர். மேலும் பேஸ் புக்கை அதிகம் பயன்படுத்தும்நாடுகளின் வரிசையில் அமெரிக்கா ஆறாவது இடத்தையும் , ஜப்பான் 35 சதவீதத்துடன் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தி்ல உலகம் முழுவதிலும் உள்ள 24 நாடுகளில் உள்ள சுமார் 19 ஆயிரத்து 216 இளைஞர்களிடம் இது குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|