பதிவு செய்த நாள்
31 மார்2012
00:14
புதுடில்லி:இன்றுடன் முடிவடைய உள்ள, 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-08 முதல் 2011-12), மார்ச் 29ம் தேதி வரை, கூடுதலாக 53 ஆயிரத்து 922 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.நடப்பு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், கூடுதலாக 78 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, மறு மதிப்பீட்டில், 62 ஆயிரம் மொகாவாட்டாக குறைக்கப்பட்டது. தற்போது, இந்த இலக்கையும் விட குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
எனினும் இது, இதற்கு முந்தைய 10 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002-07) மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது (21 ஆயிரத்து 180 மெகாவாட்) இருமடங்கிற்கும் அதிகம் என, மத்திய மின் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.நிலக்கரிக்கு பற்றாக்குறை மற்றும் அதன் விலை உயர்வு ஆகியவை, மின் உற்பத்தியை வெகுவாகப் பாதித்துள்ளதாக மத்திய மின்சார ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில், முன் எப்போதும் இல்லாத அளவாக, கூடுதலாக 19 ஆயிரத்து 459 மொகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மின் உற்பத்தி நிறுவு திறன், தற்போது 1 லட்சத்து 92 ஆயிரத்து 792 மெகாவாட்டாக உள்ளது. நாளை முதல் ஆரம்பிக்க உள்ள 12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-13 முதல் 2016-17),கூடுதலாக 76 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|