பேஸ்புக்கில் வேலை: இந்திய மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம்பேஸ்புக்கில் வேலை: இந்திய மாணவருக்கு ரூ.1.34 கோடி சம்பளம் ... பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.1.76 லட்சம் கோடி முதலீடு பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.1.76 லட்சம் கோடி முதலீடு ...
11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்... 54,000 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2012
00:14

புதுடில்லி:இன்றுடன் முடிவடைய உள்ள, 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-08 முதல் 2011-12), மார்ச் 29ம் தேதி வரை, கூடுதலாக 53 ஆயிரத்து 922 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.நடப்பு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், கூடுதலாக 78 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, மறு மதிப்பீட்டில், 62 ஆயிரம் மொகாவாட்டாக குறைக்கப்பட்டது. தற்போது, இந்த இலக்கையும் விட குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
எனினும் இது, இதற்கு முந்தைய 10 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002-07) மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது (21 ஆயிரத்து 180 மெகாவாட்) இருமடங்கிற்கும் அதிகம் என, மத்திய மின் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.நிலக்கரிக்கு பற்றாக்குறை மற்றும் அதன் விலை உயர்வு ஆகியவை, மின் உற்பத்தியை வெகுவாகப் பாதித்துள்ளதாக மத்திய மின்சார ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில், முன் எப்போதும் இல்லாத அளவாக, கூடுதலாக 19 ஆயிரத்து 459 மொகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மின் உற்பத்தி நிறுவு திறன், தற்போது 1 லட்சத்து 92 ஆயிரத்து 792 மெகாவாட்டாக உள்ளது. நாளை முதல் ஆரம்பிக்க உள்ள 12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-13 முதல் 2016-17),கூடுதலாக 76 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)