சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இடம்பிடித்த இன்போசிஸ் நாராயணமூர்த்திசிறந்த தொழிலதிபர் பட்டியலில் இடம்பிடித்த இன்போசிஸ் நாராயணமூர்த்தி ... இந்திய சுற்றுலா துறையில் ரூ.11,111 கோடி அன்னிய முதலீடு இந்திய சுற்றுலா துறையில் ரூ.11,111 கோடி அன்னிய முதலீடு ...
வெளிநாட்டு கடன் ரூ.17 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2012
00:20

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், 33 ஆயிரத்து 490 கோடி டாலராக (16 லட்சத்து 74 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைளுக்காக வெளிநாடுகளிலிருந்து, பல வகையான கடன்களைப் பெறுகிறது. மொத்த வெளிநாட்டு கடன்களில், வர்த்தகக் கடன்கள் மற்றும் குறுகிய காலக் கடன்களின் பங்களிப்பு, 84.7 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
நடப்பு 2011-12ம் நிதியாண்டின் துவக்கத்தில், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், 30 ஆயிரத்து 610 கோடி டாலராக (15 லட்சத்து 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) இருந்தது. இது, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், 9.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, அதாவது, 2,880 கோடி டாலர் (1 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்து, 33 ஆயிரத்து 490 கோடி டாலராக (16 லட்சத்து 74 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.), வெளிநாட்டு கடன்களின் பங்களிப்பு, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் இறுதி நிலவரப்படி, 17.8 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
இது, டிசம்பர் இறுதியில், 20 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது.இந்தியாவின் வெளிநாட்டு கடன்களில், நீண்ட மற்றும் குறுகிய காலக் கடன்களின் பங்களிப்பு முறையே, 76.7 சதவீதம் மற்றும் 23.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், நீண்டகால கடன்கள், 25 ஆயிரத்து 690 கோடி டாலராகவும், குறுகிய கால கடன்கள் 7,810 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளது என, நிதியமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)