பதிவு செய்த நாள்
01 ஏப்2012
00:20
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், 33 ஆயிரத்து 490 கோடி டாலராக (16 லட்சத்து 74 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைளுக்காக வெளிநாடுகளிலிருந்து, பல வகையான கடன்களைப் பெறுகிறது. மொத்த வெளிநாட்டு கடன்களில், வர்த்தகக் கடன்கள் மற்றும் குறுகிய காலக் கடன்களின் பங்களிப்பு, 84.7 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
நடப்பு 2011-12ம் நிதியாண்டின் துவக்கத்தில், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், 30 ஆயிரத்து 610 கோடி டாலராக (15 லட்சத்து 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) இருந்தது. இது, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், 9.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, அதாவது, 2,880 கோடி டாலர் (1 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்து, 33 ஆயிரத்து 490 கோடி டாலராக (16 லட்சத்து 74 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.), வெளிநாட்டு கடன்களின் பங்களிப்பு, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் இறுதி நிலவரப்படி, 17.8 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
இது, டிசம்பர் இறுதியில், 20 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது.இந்தியாவின் வெளிநாட்டு கடன்களில், நீண்ட மற்றும் குறுகிய காலக் கடன்களின் பங்களிப்பு முறையே, 76.7 சதவீதம் மற்றும் 23.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், நீண்டகால கடன்கள், 25 ஆயிரத்து 690 கோடி டாலராகவும், குறுகிய கால கடன்கள் 7,810 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளது என, நிதியமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|