பதிவு செய்த நாள்
01 ஏப்2012
00:26
புதுடில்லி:இரு சக்கர வாகனத் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், இந்திய யமஹா மோட்டார் நிறுவனம், சென்ற மார்ச் மாதத்தில், 41 ஆயிரத்து 886 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 13.92 சதவீதம் (36 ஆயிரத்து 768 வாகனங்கள்) அதிகமாகும்.
இதே காலத்தில், உள்நாட்டில், இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை, 25 ஆயிரத்து 786 லிருந்து 29 ஆயிரத்து 819 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், ஏற்றுமதி, 9.88 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10 ஆயிரத்து 982 லிருந்து 12 ஆயிரத்து 67 ஆக உயர்ந்துள்ளது."நிறுவனத்தின் ஒய்.இசட்.எப்.-ஆர்15 , எப்.இசட் மற்றும் எஸ். இசட் பைக்குகளுக்கு சந்தையில் அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது' என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஹிரோயுகி சுசூகி தெரிவித்தார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|