பதிவு செய்த நாள்
02 ஏப்2012
00:19
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் 11 மாத காலத்தில், உரம் இறக்குமதி 7 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், 68 லட்சத்து 70 ஆயிரம் டன் டை அம்மோனியம் பாஸ்பேட் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 7 சதவீதம் (74 லட்சத்து 10 ஆயிரம் டன்) குறைவாகும்.
சர்வதேச அளவில் உரம் மற்றும் மூலப்பொருள்கள் விலை அதிகரித்ததால், பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் வகை உரங்களின் விலை உயர்ந்துள்ளது. அதே சமயம், உள்நாட்டில் உரங்களுக்கான அதிகபட்ச சில்லரை விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், தற்போது சர்வதேச அளவில் உரம் விலை குறையத் துவங்கியுள்ளது என மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|