பதிவு செய்த நாள்
02 ஏப்2012
10:36
புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சேவை வரி அதிகரிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, தொலைபேசி கட்டணம், ஓட்டல் பில் உள்ளிட்டவை எகிறும். மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சமீபத்தில் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் சேவை வரி, 10 சதவீதத்தில் இருந்து, 12 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது. ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, இந்த வரி உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், நேற்று முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த 2 சதவீத வரி உயர்வு மூலம், 2012-13ம் நிதியாண்டில் அரசுக்கு, 18 ஆயிரத்து 660 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும். விமானப் பயணம், காப்பீடு, பியூட்டி பார்லர், விளம்பரம், உலர் சலவையகம், கேபிள் ஆபரேட்டர், கிரெடிட் கார்டு, தொலைபேசி, ஓட்டல் ஆகியவை உட்பட, 120 சேவைகள், சேவை வரி வரம்பிற்குள் வருகின்றன. சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளதால், இனி இந்த சேவைகளை பெறுவதற்காக, வாடிக்கையாளர் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக, தொலைபேசி, ஓட்டல் சாப்பாடு, ரயிலில் குளிர்சாதன வகுப்பு பயணம் ஆகியவற்றுக்கான பில், இனி எகிறும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,) சேவைத்துறையின் பங்கு, 59 சதவீதம் என்பதால், தற்போதைய வரி உயர்வு, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|