பதிவு செய்த நாள்
02 ஏப்2012
15:48
ஹீரோ மோட்டோ கார்ப் 110 சிசி திறன் கொண்ட புதிய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரை கோவாவில் முதலில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஹீரோ ஹோண்டாவிலிருந்து பிரிந்த பின்னர் ஹீரோ நிறுவனம் ஹீரோ மோட்டோ கார்ப் என தனது பெயரை மாற்றியது. இம்பல்ஸ் பைக்கை அடுத்து முழுக்க முழுக்க ஹீரோ பிராண்டில் வரும் இரண்டாவது டூ வீலர் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனது பிராண்டில் இம்பல்ஸ் மற்றும் மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்களை லண்டனில் நடந்த பிராண்டு அறிமுக விழாவின்போது பார்வைக்கு வைத்திருந்தது. இதில், இம்பல்ஸ் ஏற்கனவே விறபனைக்கு வந்துவிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது மேஸ்ட்ரோ ஸ்கூட்டரும் விற்பனைக்கு வந்துள்ளது.
கோவாவில் முதலில் மேஸ்ட்ரோ ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹீரோ மோட்டோ கார்ப். இந்த ஸ்கூட்டரில் 8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 109 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. தவறுதலாக முன் பக்க பிரேக்கை வேகமாக பிடித்தால் கூட பின்பக்க பிரேக்கும் சேர்ந்து பிடித்து வண்டியின் பேலன்ஸ் குறையாமல் பார்த்துக்கொள்வதுதான் காம்பி பிரேக்கிங் சிஸ்டத்தின் கூடுதல் சிறப்பு. கோவாவில் முதலில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் விரைவில் நாடு முழுவதும் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் ஷோரூம்களில் விற்பனைக்கு வர உள்ளது. நீலம், பச்சை, சிவப்பு, வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு ஆகிய 6 விதமான வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது மேஸ்ட்ரோ. கோவாவில் ரூ.48,280 விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|