பதிவு செய்த நாள்
03 ஏப்2012
11:11
மதுரை: மின்கட்டணம், வர்த்தக காஸ் சிலிண்டர், சேவை வரி உயர்வால், ஓட்டல்களில் டிபன் விலை நேற்று முதல் ரூ.5 உயர்த்தப்பட்டது. பெரும்பாலான ஓட்டல்களில் பொங்கல், தோசை போன்ற டிபன் வகைகள் நேற்று முன்தினம் வரை ரூ.25க்கும், இட்லி ஒன்று ரூ.7க்கும் விற்கப்பட்டன. இந்த விலை கடந்தாண்டு ஏப்ரல் முதல் அமலில் இருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று முதல் டிபன்களின் விலை ரூ.30 ஆகவும், இட்லி ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டது. வடை, டீ, காபி மற்றும் மதியச் சாப்பாடு விலையில் மாற்றமில்லை.
மதுரை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் குமார் கூறியதாவது : சேவை வரி 10 இருந்து 12 சதவீதமாகவும், மின்கட்டணம் யூனிட் ஒன்று ரூ.1.50 வரை கூடுதலாகவும், வர்த்தக காஸ் சிலிண்டர்(19 கிலோ) ரூ.1681லிருந்து ரூ.1904 ஆகவும் அதிகரித்துள்ளன. தொழிலாளர்களின் சம்பளம் 20ல் இருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேறுவழியின்றி டிபன் விலையை உயர்த்தியுள்ளோம். கடந்த டிசம்பரில் பால் மற்றும் உணவுப்பொருட்களின் விலை உயர்வால் சாப்பாடு, காபி விலையை உயர்த்தினோம். எனவே, இப்போது அதன் விலையை உயர்த்தவில்லை, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|