பதிவு செய்த நாள்
06 ஏப்2012
00:05
சென்ற 2011-12ம் நிதியாண்டின், நான்காவது காலாண்டில் (ஜனவரி -மார்ச்), தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், பல்வேறு நிறுவனங்களில் மேற்கொண்ட முதலீடு, 188.60 கோடி டாலராக (9,430 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 47 சதவீதம் (361.40 கோடி டாலர் - 18 ஆயிரத்து 70 கோடி ரூபாய்) குறைவாகும்.சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், 90 ஒப்பந்தங்கள் வாயிலாக, பங்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்த எண்ணிக்கை முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 107 ஆக அதிகரித்திருந்தது என, ஆய்வு நிறுவனமான வென்சர் இண்டலிஜன்ஸ், வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற நிதியாண்டின், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், 120 ஒப்பந்தங்கள் வாயிலாக, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு, 147 கோடி டாலராக (7,350 கோடி ரூபாய்) இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|